புதன், 31 டிசம்பர், 2008
தீர்த்தன் நீங்களே
நேசம் வைத்த உங்களைக் காலன் கவர்ந்து சென்றானோ.
உங்களில் எங்களைக்கண்டிருந்தோம்..ஐயா
அனைத்தும் உலகமாய்..நீங்களே ஒருவராகப் பார்த்திருந்தோம்..ஐயா
ஆலம் விழுதுபோல ஆடிமகிழ்ந்திருந்தோம்..
ஆலய ஒளிவிளக்காய் அகம் மகிழ்ந்திருந்தோம்..
ஆழம் காணாத அன்போடு அனுதினமும் பார்த்திருந்தோம்..
அன்பு என்றால் என்ன என்று ஐயா உங்களிடத்தில் கற்றிருந்தோம்..
ஆண்டு ஒன்று திதி நவமியில் அடைந்திருந்தோம்..
அதுவும் என்னை இவ்வுலகிற்கு அறிமுகநாளன்று
அதற்காக நன்றி சொல்ல அதே நாளில் திதியாய் நிவேதனம்
படைத்து அழகாய் இருக்க அருள் தந்தீங்களா ஐயா..
உங்கள் பிரிவால் வாடுகின்றோம் நாம் என்று சொல்லி..
சொர்க்கத்திலும் எம்மை நினைத்து நீங்கள் வேதனையடைய விரும்பவில்லை..ஐயா
கற்றுக்கொடுத்த நல்லறிவோடும், பண்போடும்..
நாளும் வாழ்வோம் உங்களை மறவாத நினைவுளால்
அசையும் உங்கள் உடலை மட்டுமே இழந்திருக்கின்றோம்..
அமைதியான உங்கள் பேச்சும், ஆற்றல் மிக்க அறிவையும்..
அனுசரித்துப்போகும் நல்ல பண்புகளையும்..
அன்போடு யாவரோடும் பழகவேண்டும் என்ற நல்ல குணங்களையும்...
வாழ்நாள் முழுவதும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற
உங்கள் ஆசையையும் என்றும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவோம்..
கண்கள் கலங்க கையசைத்துப் போன காட்சி கண்முன்
நினைத்துக்கலங்கி என்ன பலன்.? தீர்த்தன் நீங்களே வணங்குகின்றோம் வாழ்விலே.
-----------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
www.thamilworld.com
ஞாயிறு, 14 டிசம்பர், 2008
கண்ணில் ஓர் ஈரம்...
மின்சாரம் வரமுதல்..
முற்காலத்து மக்களின்
பாவனைப்பொருட்களை...
வரிசைப்படுத்தி..
நிழற் படங்களாக
கண்காட்சி நிலையத்தில்..
ஆச்சரியத்தோடு
விழிகளை உயர்த்திப் பார்க்கும்
வேற்று மொழி மக்களோடு
நானும் என் மகனுக்கு..
விளக்கி காட்டிக்கொண்டு வந்தேன்..
மிக்ஸி, கிரைண்டர் வந்ததால்
அழிந்து போகும்..
உலக்கை, உரல், அம்மி,
அரிக்கன் லாம்பு, ஆட்டுக்கல்..
இப்படியே அடுக்கடுக்காய்...
கண்ணில் ஓர் ஈரம்..
நெஞ்சில் ஓர் அச்சம்..
பல ஆண்டுகள் செல்ல..
தமிழ் மொழியும்..
பண்டைக்கால மொழியாம்
என மியூசியத்தில்தான் பார்க்கவேண்டிவருமோ என..
என் கண்ணில் ஓர் ஈரத்துளி.
வெள்ளி, 28 நவம்பர், 2008
முழு நிலவு
என் முன் முழு நிலவாய்
நீயிருந்தாய்..
இன்று அமாவாசை என்றனர் பலர்..
பெளர்ணமி என்றேன் நானும்..
சிரித்துக்கொண்டார்கள்..
நானும் சிரித்துக்கொண்டேன்..
நீ என் அருகில் இருப்பதை புரிந்து
கொள்ளாத அவர்களை எண்ணி..
**********************************
நிலாவில் உலா வரும் தனிமதி..
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
கண்ணில் ஓர் நிலவு.
வெள்ளி, 14 நவம்பர், 2008
சினேகிதனே..
மூங்கில்லாக்காட்டில்..
வெறுமையை நிரப்ப வந்த...
சங்கீதமே..
மனதோடு பேசும் சுவாசிக்கும்
தென்றலே...
அதில் முதல் விமர்சகராய்
என்னை உற்சாகப்படுத்தும்
உன் வார்த்தைகள்..
உன் நினைவுகள்..
ஓயாத அலையாய்..
ஓடி வரும் உன் அழைப்புகள்..
அதிர்ஸ்டசாலியாக நானும்
இப்புவி தனில் உன்னையடைய
என்ன வரம் வேண்டி வந்தேன்..
உன் சினேகம்
சிறகடித்துப்பறக்கிறது.
மீண்டும் உன் சினேகவுறவு நிழல் நாடி.
-----------------------------------------
நிலாவில் உலா வரும் தனிமதி.
http://www.nilafm.com
கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..
சனி, 8 நவம்பர், 2008
தனிமை
நலமாக இருந்த
நண்பனே....
ஊரார் கூடி
உன்னை
ஊர்த்தொலைவிலுள்ள
இடுகாட்டிற்கு அனுப்பிவைத்தார்..
நாள் தோறும் கிழிக்கப்பட்டு
ஆண்டு முடிவில்
அட்டை மட்டும் தொங்கியிருக்கும்
தினத்தாள் போல்..
நாள் தோறும் உனக்காக உழைத்து..
நான் மட்டும் இன்று
தனிமையாக.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
வியாழன், 6 நவம்பர், 2008
மழை
புதன், 5 நவம்பர், 2008
புரியவில்லை..
ஓ... மனித சமுதாயமே
ஒரு கணம் எண்ணிப் பார்..
திரளாக மக்கள் திரண்டு
அலை பொங்கும் கடலாக
அள்ளிக் கொடுக்கும் மனிதநேயங்களே..நன்றிகள்.
ஒரு கணம் எண்ணிப் பாருங்களேன்...
இருக்க இடமில்லாபோது..
இருக்கை எதற்கு..?
நித்திரை இல்லாதபோது..
பாயும் படுக்கையும் எதற்கு...?
அடுப்பில்லாத போது..
அரிசியும், பருப்பும் எதற்கு..?
இருப்பிடம் இல்லாத போது..
இலவச மருத்துவம் எதற்கு..?
குடிசையோ கூடாரமோ இல்லாதபோது..
குத்து விளக்கும், மெழுகுதிரியும் எதற்கு..?
செல் வெடித்து செவிடாகிப் போன பின்பு..
செய்திகேட்க வானொலி எதற்கு..?
கண்ணைப் பறிக்கும் கதிர்கள் கண்ணைத் தாக்கியபின்பு...
கண்குளிர பார்க்கும் தொலைக்காட்சி எதற்கு..?
கண்ணி வெடியில் கால் போன பின்பு..
காலுக்குச் செருப்பு எதற்கு...?
மானம் காக்கும் உடை உடுத்த மறைவிடமில்லாதபோது..
மாற்றியுடுக்க உடை எதற்கு...?
கடையும், தெருவும் இல்லாது காட்டிலிருக்க..
கைச்செலவிற்கும், இதர செலவிற்கும் காசெதற்கு...?
பாடசாலையே இல்லாது இருக்கும் போது..
கல்விப்புத்தகமும், ஏட்டுப்புத்தகமும், எழுதுகோலும் எதற்கு...?
தெய்வமே களவு போனபின்பு..
கோயில்களும் கோபுரங்களும் எதற்கு...?
எண்ணிப்பார்...
ஒவ்வொருவரும் இதனை எண்ணிப்பார்..
எண்ணிலடங்கா மக்கள் முகவரிகள் இல்லாதபோது..
இருப்பது இருபது கோடியானாலும் என்ன பலன்..?
இன்றோடு முடிந்து விடுமா இந்த அவலம்..?
இன்னுமொரு தடவை மேடை போட்டு..
துண்டு விரிக்கும் நிலமை வேண்டாம்..
இருப்பதற்கு மீட்டுக்கொடுங்கள் நிரந்தரமாக
நின்மதியாக வாழ வழி செய்யுங்கள்..
இனியும் இந்த அவலம் ஏற்படாதவாறு..
வழி அமைத்துக்கொடுங்கள்..
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்..
பாதிகப்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும்.
----------------------------------------------------
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.
www.nilafm.com
திங்கள், 27 அக்டோபர், 2008
தீபாவலி
இங்கும் கேட்கின்றது..
தீபாவளியின் சர வெடிகள்..
வருடத்தில் ஒரு நாளில் இல்லை..
வருடம் முழுக்க
விரும்பாத வெடிகளாய்..
விரக்தி வாழ்வின் வெளிச்சங்களாய்..
எரியும் நெருப்பில்..
எழமுடியாத வடுக்களில்..
கண்கள் எரிந்து கண்ணீரால் அனைந்து..
இதயம் படபடக்க..
விழிகள் விழித்திருக்க..
இரவென்ன பகலென்ன...
காதைப் பிளக்கும்..
கண்ணைப் பறிக்கும்..
உயிரைக் கொல்லும் தீயின் வலி..என் தீபாவலி.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com
ஈழம் சுடுகின்றது.
ஈழம் சுடுகின்றது..
சுடு காடாய் பிணங்கள் குவிகின்றது..
மரண ஓலங்கள் தினமும் அங்கே
மார்பில் அடித்துக்கதறுகின்றது..
எறிகணைக் குண்டுகளால்
எம் இனத்தை எரித்து அழிக்கிறான் ஏதலன்.
ஏன் என்று கேட்போருக்கும்..
எதுவித பதிலும் இன்றி எதிர்கிறான்..
இருந்தும் இருந்துவிடமுடியுமா ..
இயலுமானவரை காத்திடுவோம்..
எம்மினம் அழிவதை தடுத்திடுவோம்..
புரட்சிப்பூக்களுக்கு பூட்டு இல்லை..
புரியும் படி எடுத்துரைப்போம்..
புலம் பெயர்ந்து நாம் வாழ்ந்தாலும்..
எம்மினம் அழிவதை..
தடுத்திடுவோம்...
திரண்டு எழுவோம்..
திக்கெங்கும் குரலெழுப்புவோம்..
தினம் பிணம் இல்லாது..
மனம் நொந்திருக்கும் எம் மக்களை காத்திடுவோம்...
கொட்டும் மழையினுள்ளும்..
கொடிய விஷப் பாம்புகள் மத்தியிலும்..
நட்ட நடு நிசியிலும்..
நாளும் வெந்து துடித்து பதறி வாழ்ந்து..
மடிகின்றதே எம்மினம்..
வெட்ட வெளி சிறைச்சாலையில்..
வெறுமையில் வாழும் மக்களுக்கு..
மனம் மிரங்கி நாமும்
ஏதும் செய்திடுவோம்..
நமக்கு என்ன குறை
பார்ப்பதற்கு தொலைக்காட்சி..
படிப்பதற்கு கணனி..
உலா வர ஊர்தி..
மாற்றி உடுக்க உடை
உறங்க ஓர் உறையுள்..
இதில் ஒன்றாவது எம் மக்கள்
அநுபவிக்கிறார்களா..?
அல்லும் பகலும் இன்னல்களைத்தாங்கி.
சுடும் நிலத்தில்..
வெந்து வெடித்து வேதனையில்
துயிலெழுந்து துடிக்கின்றார்கள்..
ஆகாயத்தில் காகம் பறந்தாலும்..
அச்சப்பட்டு ஓடி ஒளிகின்றார்கள்..
பள்ளிக்கூடம் சென்றாலும்..
மனம் பக்குவமாய் ஒரு நிலையில் இல்லை..
பதுங்குளியில் வெள்ளைச்சிறார்கள்..
உயிர் காப்பாற்ற உயிரை கையில்
பிடித்துக்கொண்டு கதறி அழும் காட்சி
பார்ப்பவர்கள் எவராகயிருந்தாலும் கண்ணீரை
வரவழைக்கின்றதே..
வளமாக வாழ வழி தேவையில்லை..
நலமாக வாழ வழி அமைத்திடுவோம்..
கதறும் எம்மினத்தை காப்பாற்ற
வழி செய்திடுவோம்..
சுடும் ஈழத்தை எம் உணர்வுகளால்
காத்திடுவோம்...
------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
வியாழன், 16 அக்டோபர், 2008
யாருமில்லா ஊரில்...
சுதந்திரமில்லா நாட்டில்
வெட்டப்பட்ட மரம் ஒன்றில்
கூடிழந்து தவிக்கும் பறவை நான்..
வதிவிடம் தேடி வந்தவிடத்தில்
வார்த்தைகள் மெளனமாகி மனம் கதறுகின்றேன்...
ஓடி ஓடிச் சம்பாதித்தாலும்..
தேடி வரும் சொந்தம் எவருமின்றி
வாடிய பூவாய் மனம் வாடுகிறேன்..
புலம் பெயர்ந்து வந்த இடத்தில்..
கூடி வாழ்ந்த வாழ்க்கை
கூதூகலித்த அந்நாட்கள்
ஓடி ஒளிந்து விளையாடிய பொழுதுகள்
ஒருவரை ஒருவர் அன்போடு
அரவணைத்த நிமிடங்கள்..
கோடி கொடுத்தாலும்
தேடி திரும்ப வருமா அந்நாட்கள்..?
அதிகாலை காலை மாலை என
ஆலய மணி ஓசைகள்
வெள்ளைச் சீருடையில்
கள்ள மில்லா உள்ளங்கள்
பள்ளி செல்லும் காட்சிகள்..
படபடவெனச் சிறகடித்துச்செல்லும் பட்சிகள்...
பட்டொளியாய்ப் பறக்கும் சிறுவர்கள் கைகளில் பட்டங்கள்..
கூவிக் கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..
கூரை மேல் சேவல்
மதில் மேல் பூனை..
கூட்டுக்குள் கிளி..
காலைச் சுற்றும் நாய்..
கனிவாகப் பேச அயலவர்கள்..
ஓடி ஒளிந்து கொள்ள
அம்மாவின் முந்தானைச்சேலை..
தாவித் தோளில் தொங்க அப்பாவின்
வைரமான தோள்கள்..
சிறுவயது ஞாபகங்கள்
பற்றிக் கொள்ள..
முழுநிலவு துணையோடு
பாட்டுக்குப்பாட்டும்
கேட்டுக்கொண்டு பாத்திரத்தில்
போட்டுக்கொண்ட இசையும்
தூறல் மழையில் நனைந்த சுகமும்..
இதயமாய் வீசிய தென்றல்க் காற்றும்..
இதயத்தை வருடும் மலர்களின் நறுமணமும்..
இதயத்தை விட்டு அகலாத நினைவுகளாய்
இறுதி வரை இன்பமாய் தொடருகின்றது
என் ஞாபகங்கள் யாருமில்லா இந்த ஊரில்.
_________________________________________
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் தனிமதி.
www.nilafm.com
சனி, 27 செப்டம்பர், 2008
என் அருகில் ஓர் நிலா
இறக்கையடித்துப் பறக்கும்
பட்டுப்பூச்சி சத்தமின்றி
பூவிற்கு கொடுக்கும் முத்தம் போல்..
வட்ட நிலா அவன்
மெளனம் மட்டும் பேசும்
என்மனதோடு அமைதியாய் என்னாளும்..
கிட்ட வந்தான் ஒரு பொழுதில்
எட்டப்போகுமுன்
தொட்டுவிடத் துடித்தான்..
பட்டுப்போன்ற அவன் கரங்கள்
தொட்டவுடன் அன்று பெய்த
மழையில் நனைந்த பூவாய் ஆனேனே..
புருவம் ஒன்றை
தொட்டுக்கொண்டிருக்கும் அவன்கேசம்
எனக்கும் வளர்ந்தது அதுபோல் அவனில் நேசம்..
அதிகாலைச் சூரியன் இரண்டாய்
திரண்டு வந்தது போல்
ஒளிமிகுந்த அவன் பார்வையில்
நானும் ஒளிந்து கொண்டேனே...
அதிகம் உதிராத பூக்கள்
அவன் வார்த்தைகள்
அதனால்தான் என்னவோ
அதுவே அவன் தந்த கவிதைகள்..
கவிதைகள் எழுதவில்லை
காரணம் நான் கேட்கவில்லை
புரிந்து கொண்டேன் அவனே ஒரு கவிதை தானே..
உயரத்திலிருந்து வந்த நீர்வீழ்ச்சி
பரந்து விரிந்து பல பெயர்கள் கொள்வதுபோல்..
அவன் ஒருவனே பலகலைகளையும்
பக்குவமாய் அறிந்து ஆற்றல்கொண்டுள்ளானே..
கல்லூரித்தோழிகளோடு கற்பனையில்
உலகம் சுற்றி வந்ததுபோல்
அவனோடு அழகிய நினைவினில்
அடிக்கடி நானும் இனிய கற்பனையில்..
நிலாவைத்தேடி விண்ணுலகம் சென்றோர் பலர்..
நினைக்கவில்லை நானும்
நிலாவே என் அருகில் வந்தது போல் ஓர் சுகம்.
-----------------------------------------------------------
கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் "தனிமதி"
www.nilafm.com
திங்கள், 22 செப்டம்பர், 2008
யாருமில்லா ஊரில்..
சுதந்திரமில்லா நாட்டில்
வெட்டப்பட்ட மரம் ஒன்றில்
கூடிழந்து தவிக்கும் பறவை நான்..
வதிவிடம் தேடி வந்தவிடத்தில்
வார்த்தைகள் மெளனமாகி மனம் கதறுகின்றேன்...
ஓடி ஓடிச் சம்பாதித்தாலும்..
தேடி வரும் சொந்தம் எவருமின்றி
வாடிய பூவாய் மனம் வாடுகிறேன்..
புலம் பெயர்ந்து வந்த இடத்தில..
கூடி வாழ்ந்த வாழ்க்கை
கூதூகலித்த அந்நாட்கள்
ஓடி ஒளிந்து விளையாடிய பொழுதுகள்
ஒருவரை ஒருவர் அன்போடு
அரவணைத்த நிமிடங்கள்..
கோடி கொடுத்தாலும்
தேடித் திரும்ப வருமா அந்நாட்கள்..?
அதிகாலை காலை மாலை என
ஆலய மணி ஓசைகள்
வெள்ளை சீருடையில்
கள்ள மில்லா உள்ளங்கள்
பள்ளி செல்லும் காட்சிகள்..
படபடவென சிறகடித்துச்செல்லும் பட்சிகள்...
பட்டொளியாய் பறக்கும் சிறுவர்கள் கைகளில் பட்டங்கள்..
கூவிக் கூவிக் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..
கூரை மேல் சேவல்
மதில் மேல் பூனை..
கூட்டுக்குள் கிளி..
காலைச் சுற்றும் நாய்..
கனிவாகப் பேச அயலவர்கள்..
ஓடி ஒளிந்து கொள்ள
அம்மாவின் முந்தானைச்சேலை..
தாவி தோளில் தொங்க அப்பாவின்
வைரமான தோள்கள்..
சிறுவயது ஞாபகங்கள்
பற்றிக் கொள்ள..
முழுநிலவு துணையோடு
பாட்டுக்குப்பாட்டும்
கேட்டுக்கொண்டு பாத்திரத்தில்
போட்டுக்கொண்ட இசையும்
தூறல் மழையில் நனைந்த சுகமும்..
இதயமாய் வீசிய தென்றல் காற்றும்..
இதயத்தை வருடும் மலர்களின் நறுமணமும்..
இதயததை விட்டு அகலாத நினைவுகளாய்
இறுதி வரை இன்பமாய் தொடருகின்றது
என் ஞாபகங்கள் யாருமில்லா இந்த ஊரில்.
__________________________________________
கொடுத்து வாழ். கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.
www.nilafm.com
புதன், 2 ஜூலை, 2008
மெல்லத் துளிர்த்தாய்..
நித்தம் நித்தம் நானும் பார்க்கிறேன்
சத்தம் ஏதும் இல்லாமல் நீயும் பார்க்கிறாய்
உனக்கும் எனக்கும் அப்படி என்னதான் யுத்தம்
எப்படியோ வந்துவிட்டாய்.
மலர ஏன் தாமதம்
மனதுக்குள் என்ன விரகதாபம்
இன்று மலர்வாய் நாளை மலர்வாய்
என்று நினைத்து எனக்குள் ஏமாற்றம்
என்று மலர்வாய் நானறியேன்
இன்றே மலராயோ நறுமணம் தாராயோ
புதிய பூவாய் எங்கும் மணம் பரப்ப
உன் வரவு எதிர் பார்த்து என் மனம்
தினம் தினம் அதில் நாடும்
மெல்ல மெல்லத்துளிர்த்தாய்
அள்ள அள்ள கொள்ளை ஆசை
அழகான பூக்களே பூப்பது எப்போது..
நீ வெய்யிலில் வாடினால்
மழையாய் நான் வருவேன்
மலராய் நீயும் வந்தால் என்கூந்தல் உனக்காய் காத்திருக்கும்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.
www.nilafm.com
ஊமையின் மனசு...
குயிலின் இனிமையான குரல்
கூவும் போது தெரியும்..
மழலையின் கிளிப்பேச்சு
பேசும் போது புரியும்....
அலையின் சத்தம்
கரையைத் தீண்டும் போது கேட்கும்....
தென்றலின் வருகை உடல்
தழுவும் போது உணரும்...
பாடலின் இனிமை அதன்
இசையில் இன்பம் தரும்...
பாவையின் மனம் உன்னை நினைப்பதை
உன்னால் எப்படி அறியமுடியும்...
எடுத்துச் சொல்ல என்னால் முடியவில்லை..
இருந்தும் எழுதுவதால் உனக்குப் புரியும்..
இந்த ஊமையின் மனதில்...நீ
வந்த நாட்தொட்டு நான் உன் நினைவில்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி
www.nilafm.com
வெள்ளி, 27 ஜூன், 2008
மனது ஒரு நவரசம்.
அலுத்துக்கொண்ட இதயம்
இன்னும் அழுதுகொண்டேயிருக்கிறது
பகட்டான வாழ்வுக்கு மனிதன் மட்டும்
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறான்...
சனிக்கிழமை என்றாலே கொண்டாட்டம்...
அதுவும் கோடைகாலத்தில் திருவிழாக்காலம்..
அதிகாலையில் வந்திடும் அயல்நாட்டிலிருந்து அழைப்பு...
ஊர்ச்செய்தி, உலகச்செய்திகளுடன் அலுத்துக்கொண்டபடி மனதும்...
அபூர்வமாக வந்திடும், பகல் மூன்று மணிக்கு
அன்னார் பூதவுடல் தகனம்.......அப்போதும் செல்லுகிறேன்..
அடுத்தாற் போல் மாலை ஆறு மணிக்கெல்லாம் மணமக்கள் வரவேற்பு...
அழுத விழிகளுக்கு மையிட்டு, அடடா நல்ல கொண்டாட்டம் கண்டு மகிழும் மனது...
இரவு நேரம் உறங்கும் நேரம் உறக்கமின்றி
பக்கம் பக்கமாக பார்த்து தட்டிச்செல்லும் போதெல்லாம்..
அடிக்கடி மாறும் முகபாவங்களும் மனதும்..
மாறிமாறி மேடை ஏறாத, வாழும் மானிட வாழ்க்கை..
ஒரே நாளில் கருப்பு உடையில்
கவலை மனதில்...
ஒரே நாளில் கலர் உடையில்
கலகலப்பான மனதில்...
அதே நாளில் கணனியில் காணும் கண்களில்
காட்சிகளின் தண்டனையாக மாறிடும் நவரச மனமே..
போதுமே வாழ்க்கையில் தந்த மாற்றங்கள்...
மறு பிறப்பிலாவது நிழல் தரும் மரமாக மாற்றிவிடு என்னை.
(இப்படத்தில் மறைவாக காண்பிக்கப்படுவது பல மனிதர்களின் முகங்களேயாகும் )
---------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி
www.nilafm.com
வியாழன், 26 ஜூன், 2008
புதன், 25 ஜூன், 2008
மெளனம் கலைவதெப்போ...?
மெல்ல விடியும் பொழுதில்..
காலைக்கதிரவன் கரங்கள் நீட்டி காத்திருக்க..
நீண்ட இரவைக்கழித்து மீண்டும்
உன்னருகே புள்ளி மான்கள் பார்த்திருக்க..
கெண்டை மீன்கள் உன் உடல்...
மெல்லத் தீண்டி சிரித்து மகிழ்ந்திருக்க..
உன் வரவு கண்டு அதிகாலையிலே..
கருவண்டுகள் சுற்றிசுற்றி சிறகடித்து பறந்திருக்க..
அள்ளிக் கொள்ளும் கரங்கள் ஆவலோடு
எதிர் பார்த்திருக்க...
நாளும் உன் மலர்வை எதிர்பார்த்து..
நாணத்தால் அகம் சிவந்திருக்க...
மெல்ல இதழ் விரித்து..
மடல் திறந்து...
உனதுள்ளம் மலர்ந்து..
தென்றலோடு மணம் கலந்து....
கபடமற்ற மலரே தாமரையே...நீ
மலர்ந்து மெளனம் கலைவதெப்போ...?
-----------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
நிஜங்களின் நினைவுகள்.
கண்ணெதிரே நின்றாய்..
கதைகள் பல சொன்னாய்...
முன்னம் ஒருபோதும் காணா..
உனதுள்ளம் தந்தாய்.
அடிவானம் சிவந்தது போல்..
அமைதியாய் நானும் உன்வசமாகினேன்..
பிடிவாதமாய்க் கேட்டாய்..
பதிலும் நானும் தந்தேன்.
தாய் முகம் கண்டு..
மொழி வராத குழந்தையாய்..
மனம் முழுதும் உன்முகம் கண்டு..
மனதால் தினம் பேசி, நினைவால் வாழுகிறேன்.
யார் யாருக்கோ எல்லாம்..
கவிதைகள் எழுதி குவிக்கிறாய்.
என் மனம் வேதனையடைக்கூடாதென்று..
எங்கோ ஒரு மூலையில் என்பெயரைத் தினிக்கிறாய்.
அங்கேயும் நான் நினைப்பதெல்லாம்
உன் கவிதை கண்ணூறு படாமல் இருக்கவாவது
என் பெயர் அதில் இடம் பெறட்டும்
அதிலாவது நான் வாழந்து கொண்ட திருப்தியில்.
மார்கழி வருகிறது என்றாலே
மனம் நிறைந்த ஆனந்தம்..
எப்போதோ பதித்த கால் தடங்கள்
பார்த்து மலர் தூவி மார்கழியை வரவேற்கின்றேன்.
சிந்தையிலே தென்றலாய் வந்தாய்..
தென்றலை காற்றலையாய் தந்தாய்.
கற்றது கை மண் அளவிருக்க
பற்றுவைத்து நீயும் என்னை ஊக்கிவித்தாய்..
சிகரமாய் என்னை நீயும் போற்றி
புகழ் பாட்டாய் பல போட்டு தினம்
உன் வசமாக்கி என் நினைவுகளை
உன் நினைவுகளாக மட்டும் வாழவைத்தாய்.
காலைக் கதிரொளி பட்டு
மலர் படிந்திருக்கும் பனி விலகியது போல்
உன் வரவு கண்டு என் கண்ணீர்த்
துளி காய்ந்து கவலை போய் மகிழ்வாய் நானிருப்பேன்.
அந்த இனிமை நிறைந்த
நிஜமான நினைவுகளால் பகல்
கதிரவன் நிழலாய் தொடர்ந்து வரும்
நிஜங்களில் நினைவுகளைச்சுமக்கிறேன்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
முகவரி இல்லாத முகங்கள்.
அன்னையவள் கைபிடித்து
அடிமேல்அடி எடுத்துவைத்து
மெல்லப்பேசும் கிள்ளை மொழியில்
செல்லக்கதைகேட்க ஆசையாய் என்னைத்
தொட்டுத்தூக்கி உச்சிமுகந்த எத்தனை உறவுகள்
விட்டுப்பிரிந்த நாட்முதல் தேடுகிறேன்
முகவரி இல்லாத முகங்களை..
கல்விபயில கல்லூரி வாசலிலே
கவலைகள் மறந்து
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
பட்டதுன்பம் எதுவுமின்றி
பகல் இரவாய் பாடித்திரிந்து கூடி குதூகளித்த..
அந்த முகவரிகள் இல்லாத
அன்பான பள்ளித்தோழிகள்..முகங்கள் எங்கே..?
ஆலயத்திருவிழாவில்
அணிஅணியாய் கன்னியர்கள் நாம்
வீசப்படாத வலையாம், வாலிப வலையில்
விழுந்து சிக்கித்தவித்து தாவணியில் வலம் வர..
தவம் கிடந்து மனம் கசிந்த..
அந்த முகவரி தெரியாத முகங்கள்
இன்று எங்கெங்கோ எல்லாம் தேடுகிறேன்..
காலத்தின் வேதனைகளைச்சுமந்து..
கடல் கடந்து வேறு இடமாய்
கரை ஒதுங்கி
கண்கள் சந்தித்தவர்களெல்லாம்
நலம் கூறி விடைபெற்ற
அந்த நல்ல மனம் படைத்த
முகவரி இல்லாத முகங்களை தேடுகிறேன்.
இல்லத்தில் இருந்து இணையத்தில் வந்து
இதயத்தில் இடம் பிடித்து..
இன்னல்கள் வரும் போது
இறைவன் துணையாய் அருள் வாக்குத்தந்த
இந்த அன்பான உறவுகள் எம் முற்றத்து
முகவரி இல்லாத முகங்கள்.
இதுநாள் வரை
இப்படி நான் சிந்தித்ததில்லை...
இதை எழுத வைத்த உன்னை நான்
சந்தித்ததில்லை...இனிமேல் நானும்
மறந்துவிடப்போவதுமில்லை என்
எண்ணத்தில் நீயன்றி வேறெதுவுமில்லை...
நீயும் எனக்கு
முகவரி தெரியாத முகங்கள்.
( நிலாமுற்றம்)
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
அதிகாலை மலர் அது.
அதிகாலை துயிலெழுந்து..
ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..
விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..
படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..
பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..
பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..
புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..
புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்து
பக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....
ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..
ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..
அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..
நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..
திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..
வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..
அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..
வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..
எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..
எதிரில் நானும் அதை ரசித்தபடி..
எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..சோர்ந்துபோகாது..
என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...
இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..
சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..
ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...
மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..
இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..
இனிய அந்த நாட்கள் இனிவருமா...? அதுமட்டுமா...
அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..
அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..
அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...
அன்றைய காலைப்பொழுதில், அதிகாலை மலராக நானும்
அனைவரோடும் அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று
அதிகாலை மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..
பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..
பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..
பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன். மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.
பட்டபாடும், அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..
யாருக்கும் புரியாது..அந்த மன நிலை.
யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
திங்கள், 9 ஜூன், 2008
காத்திருப்பு.
அன்னை மடியில் பிறந்து
மண்ணின் போர்வையில் முகம்
புதைத்து கண்ணீர் வற்றி
இன்னும் ஏதும் கிடைக்குமா நான் வாழ
என்றோ நீயும் தரையை உற்றுப்பார்க்க...
எங்கிருந்தோ வந்த பருந்து
விருந்து ஒன்று விரைவில்
கிடைத்ததை எண்ணி
வருந்தும் நிலையறிந்தும்...
கிடைத்த விருந்தை
அடைய நினைக்கின்றதோ...
அன்றி..
மனிதனாய்ப்பிறந்து
மனித நேயங்கள் மறைந்து..
வறுமையிலும் கொடுமையான
பட்டினி எனும் நோய் வாட்டி
கிள்ளிப்பார்க்ககூட
எள்ளலவும் சதையின்றி..
எடுப்பார் யாருமின்றி
பிழைப்பார் எவருமின்றி
இதயம் மட்டும் துடிக்க
இப்படியும் உணவு உண்டு
பிழைக்க வேண்டுமா என நினைக்கின்றதோ...?
அல்லது..
தீனி கிடைக்காமல் பட்டினியால்
நான் இறக்கும் போதும்
இருக்கும் சதையை உனக்கு
தீனியாய் தருகிறேன் எடுத்துக்கொள்
என மனிதன் மன்றாட்டமாய்
தலைகுனிந்து கேட்கிறானோ..?
எலும்பு மனிதன் எழும்ப நினைக்கிறான்..
எதிரில் பருந்து உணவை நினைக்கிறது..
யார் யாருக்கோ காத்திருப்பு
யாருக்குத்தான் அதில் நல்ல தீர்ப்பு.
--------------------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
புதன், 4 ஜூன், 2008
சோகங்கள் என்னோடு மட்டும்.
சோகங்கள் என்னோடு மட்டும்
ஏன் சோர்வின்றி நித்தமும்
வேறூன்றி திடமாய் இருக்கின்றது..?
நீர் இல்லா நிலத்தில்
விளையுமோ நற்பயிர்..?
நீர் ஊற்றி நான்
வளர்க்காத போதும்
கண்ணீர் ஊற்றால்..
தினம் கிளைவிட்டு
இடறின்றி துளிர்விட்டு
வளர்கின்றதே சோகம் எனும்
ஆல விருட்சம்..
போதும் போதும் சாமி
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி
அலைகடல் கரைதொடமுன்
மனம் அலைகின்றதே
இடர் பட்ட இடமெல்லாம்.
தொடர் கதை இதுதானோ..?
குறையேதும் வைத்ததுண்டோ கூறு..?
குறைவில்லா உயிர்கள் வாழ.
நிறைவாக நினைத்ததை தந்து
உன் கடன் தீர்ப்போம்.
அடுத்தடுத்தாய் கடிதங்கள்
துயர் பல சுமந்து
கண்ணிர் துடைக்கும்
துலாநீர் பாரங்கள்.
ஏங்கித் தவிக்கும்
எம்முறவுகளின் கூக்குரல்கள்.
எங்கு சென்று தஞ்சம்மென
என்னாளும் தவிக்கும்
எண்ணற்ற மக்கள்..
காலங்கள் எண்ணி எண்ணி
கன்னிகளும் கரை தேடா
மனக் கனவுகளில் மணக்கோலங்கள்
நாளைய உலகில்
நானும் பட்டதாரி என
நாளெல்லாம் கனவு கண்டு
நடுங்கி ஒடுங்கி நடுவீதியில் விசாரணையில்
நாதியற்று கிடக்கும் மாணவர்கள்
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பிதாயே..
வேலை செய்தால் வரும் 50 ரூபா
வேண்டியதெல்லாம் வேண்டாவிட்டாலும்
வேளை ஒரு வேளை உணவு உண்ண
வேண்டுமய்யா ஒரு நிரந்தர வேளை..
கையில் பொதிகளும்
பையில் பணமும்
பக்குவமாய் செயல்பட
பயணித்திடுவார் அடுத்தநகர்.
மனதில் திடமும்
கையில் பலமும்
இருப்பவன் எண்ணிட வழியில்லையே
இருப்வரை விட்டு விலத்தி வாழ..
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.
தமிழ் என்ன முஸ்லிம் என்ன
சிங்களம் என்ன பறங்கி என்ன
சித்திரவதை பட்டு சிதறுண்டு வாழ்வது
அப்பாவி எனும் மக்கள் தானே..
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.
அண்டை நாடொன்றில்
அழகாய் நான் வாழ்கின்றேன் இருந்தும்
அவமானம் எனக்கு சொந்த
நாடென்று இதுநாள் வரை
இல்லாத போதும்..
அகதி என்ற பட்டம்
ஆயுள் வரை அடுத்தவன்
எனக்கிட்ட நாமம்.
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி சாமி.
-------------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
தென்றல் காற்றே.
எத்தனை சுமைகளை தான்
இத்தனை நாள் பொறுத்திருந்தேன்..
ஏன் இன்னும் என்னை வெறுக்கிறாய்..
பட்ட காயம் ஆறமுன்
மறுபடியும் ஈட்டி கொண்ட கவியால்
என்னை தாக்குவதேன்..
செய்த குற்றம் தான்
என்னவென்று எடுத்துரைத்தால்..
செய்யாது மீண்டும் செயல்படுவேன்...
திட்டங்கள் தீட்டி தீர்த்து கட்டும்
திருடி அல்ல நான்
கவி திருடியல்ல நான்..
உற்றுதான் நீயும் நோக்கினால்
உண்மை விளங்கும் உனக்குமட்டும்
உயிருள்ள என் கவிவரிகளென்று..
செத்தவன் மீண்டும் வந்ததென்று
சரித்திரத்தில்லை..
சரித்திரம் சொல்லும் செத்தவன் புகழை என்றும்..
வையகம் எங்கும் உன் காற்று
தொட்டுச்செல்லும்..
தொட்ட தென்றல் என் மூச்சாய்
நின்று எனைக்கொள்ளும்.
பட்ட துன்பம் போதுமென்று
இவள் இட்ட நாமம் தனித்தியங்கும்..
இறுதி வரை தென்றல்பெண்ணாய்
வாழப் பழகும்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6816
நாற்காலி.
அட ஏனய்யா இந்த நாற்காலிக்கு அடிபாடு..
இதை எண்ணிதான் நீ பாரு..
நாட்டு தலைவன் நீ
நாடு போற்ற வாழும் மனிதனும் நீ..
போட்ட மேடையில் எங்கிருந்தாலும்
உன் மதிப்பு ஒன்று தான்..
யாருபோட்ட சட்டம் நடு
மையமாக உனக்கிருக்கும் இருப்பிடம்...
போட்ட கதிரையும் சாதாரணமானதா..?
அரசபை அரியாசணம் உனக்கு தேவைதானா..?
சாதாரண கதிரை போட்டு விட்டால்..
சலிப்பாய் நீயும் இருப்பதென்ன..?
அவனவன் உழைப்பில் அநுபவிக்கட்டும்
ஆசையுடன் பல இருக்கைகள்..
ஏழை வீட்டில் எரியும் நெருப்பும்...
உன் வீட்டில் எரியும் நெருப்பும் ஒன்றுதான்..
இதை உணர்ந்து தான் நீயும் பாரு..
தலைவருக்கு ஒரு கதிரை, அதிலும் நட்ட நடுவில்..
சரி போகட்டும் என்றுவிட்டால்..
மாலையிலும் வேறுபாடு..
மனிதரில் வேறுபாடில்லை என்றுவிட்டு..
போடும் மாலையில் ஏனய்யா இந்த வேறு பாடு..
ஆளுயர மாலை போடுவது போல ஒரு போட்டோ..
வீதியோரங்மெங்கும் விலாசமாய் விளம்பரங்கள்..
செய்யும் நற்பண்புகளுக்கும் சேவைக்கும்..
மாலையிலும், கதிரையிலும் தேவைதானா எடுபாடு..???
பகட்டான வாழ்வும் நீயாக தேடும் புகழும்..
பாரினில் என்றும் நிலைத்ததில்லை..
பகட்டாக வாழ நீயும் நினைக்காதே..
பாசத்தை உண்மையாக வைத்துப்பழகு..
படித்தவர் படிக்காதவர் என்றதை மறந்து நீயும்..
பண்பாக நாளும் மனிதரை மதித்துப் பழகு..
நாற்காலி கூட உனக்கு ஒரு நல்வழிகூறும்..
நாமாக நாடா விட்டாலும் தாமக வந்து சேரும்.
ஞாயிறு, 4 மே, 2008
ஒரு மணிநேரம்.
ஒவ்வொரு நாளும் வருகிறாய்
ஒருமணிநேரப் பேச்சால் எனைக் கவர்கிறாய்..
குறைவாகப் பேசுகிறாய்
நிறைவாக என்மனதில் நிலைத்து நிற்கிறாய்..
நீ பிரிந்து செல்லும் நேரங்களில்
என்னை நானும் உணர்ந்து தவிக்கிறேன்..
எதிர்காலத்தில் உன் நலனில்
அக்கறையாய்இருக்க ஆசைப்படுகிறேன்..
இருந்துவிடு இன்னும் அதிகம் என்னோடு..
என்று சொல்லத்தயங்குகிறேன்..
என் உரிமை நீயில்லை
அதனால் நீசெல்ல நான் தடை ஏதும் விதித்திடேன்...
வேறு இடம் வேலைக்கு நான்செல்ல
திரும்ப இங்கு வரமாட்டாயா என ஏங்குகிறாய்..
வருவேன் நான், உனக்காக
என்றாவது ஒருநாள்..திருப்தியோடு
இன்றும் உன் ஒரு மணிநேரத்தை முடித்துக்கொண்டு..நினைத்துப்பார்க்கிறேன்...
உன்னைப்போல் எத்தனை சிறுவர்களை
நித்தமும் கவனமாகப் பார்க்கிறேன்..
ஆனால் நீயோ என்னை அல்லவா அன்பால் பார்க்கிறாய்..
என்னதான் அதிசயம் என்னில் கண்டாய்..
உன் அன்னை கூட சொல்லி மகிழ்கிறாள்..
தூக்கத்திலும் என் பெயரைச்சொல்லி
நீ அழைத்தாய் என்று..
உன்னை நானும் பிரிந்திடுவேனோ என எனக்கும் ஏக்கமாகத்தானிருக்கு...
அன்னையின் கரம் பிடித்து வருகிறாய்..
வந்ததும் என் கரம் பிடித்து மகிழ்கிறாய்..
உடற்பயிற்சி செய்து விட்டு அன்னை உன்னை அழைக்கையில்..
அழுது நீயும், போகாது அடம்பிடிக்கிறாய்..
இறைவனிடம் அப்போது கேட்டேன்...
இந்த ஒரு மணிநேரம் நீளாதோ என்று..
இப்போது கேட்கிறேன்..
தினமும்இந்த ஒரு மணிநேரமாவது உன்னைக்காண வழிவகுக்காதோ.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
ஓடும் மேகங்களே.
என் சுவாசமே..
கண்கள் உன்னைத் தேடி..
மனக்காயங்கள் பல சுமந்து..
வீதியோரத்தே தனிமையாய்..
நின்ற தேர்போல நானும்..
தவிக்கையில்...பசுமையான காலம் போய்..
இலையுதிர் காலமாய்..
இலைகள் உதிர்ந்து..
பனியில் மூழ்கி மரங்கள்..நிற்கையில்..
அடுத்த வசந்ததிற்காக..
கிளைகளும் கொப்புகளும் மட்டும் சுமந்தபடியே..
சுவாசிக்கும் மரங்கள்போலநிழலின்றி நிஜமுடனும்..
உன் வரவை எதிர்பார்த்தபடி ..நானும்..
மனச்சுமைகளை இறக்கிமறுபடியும் வரும் வசந்தம் காண.
எதிர்நோக்கையில்..வீதியோரத்து உயரமான விளக்குகளால்..
பாதிக் கிராமமே ஒளிவீசியது போல..
தூர இருந்து தரும் நிலவொளி நீயாய்..
என்னருகில் இருந்து தினம் வரும்நிலா...
நீதான்என் சுவாசமே.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
மலர்ச்செண்டு.
அதில் சந்திரசூரியனாய் நீ...
முகிழாய் நானிருக்க..
தரைதொடும் மழையாய் நீ..
கரையாய் நானிருக்க..
கரைதொடும் அலையாய் நீ..
மரமாய் நானிருக்க..
மணம் பரப்பும் மலராக நீ..
கல்லாய் நானிருக்க..
சிலைவடிக்கும் சிற்பியாய் நீ..
விழியாய் நானிருக்க..
விழிமூடும் இமைமடலாக நீ..
எழுத்தாக நானிருக்க..
எழுதிவரும் சொல்லாக நீ..
இத்தனையும் இருந்தபின்பும்..
நமக்குள் மலர்செண்டு தந்து வாழ்த்தவேணுமா..?
எமக்குள் பிரிவு வேண்டாம்..
இருவரும் நட்பால் என்றும் ஒருவரே .
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
அதிகாலை மலர் அது.
அதிகாலை துயிலெழுந்து..
ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..
விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..
படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..
பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..
பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..
புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..
புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்துபக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....
ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..
அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..
நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..
திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..
வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..
அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..
வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..
எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..
எதிரில் நானும் அதை ரசித்தபடி..
எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..
சோர்ந்துபோகாது..என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...
இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..
சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..
ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...
மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..
இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..
இனிய அந்த நாட்கள் இனிவருமா...?
அதுமட்டுமா...
அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..
அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..
அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...
அன்றைய காலைப்பொழுதில்..
அதிகாலை மலராக நானும்அனைவரோடும்
அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று அதிகாலை
மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..
பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..
பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..
பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன்.
மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.பட்டபாடும்,
அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..
யாருக்கும் புரியாது..
அந்த மன நிலை.
யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
வெள்ளி நினைவுகள்..
திங்கள், 28 ஏப்ரல், 2008
நீ என் நிலவொளி.
காத்திருக்கவேண்டும்...
இன்றுவரை உன் மெளனம்...போல்
இதுநாள் வரை நான் சந்தித்ததேயில்லை...
கரைக்கு யார்கொடுத்த வரம்..
கடலலையின் கண்ணீர் நுரையை..
தாங்கும் சக்தி...
யாருமிருந்தால் சொல்..
என் கண்ணீர் மட்டுமல்ல..
மனம் கொண்ட கவலைகளையும் தள்ளிவிட்டு..
மீண்டும் என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள..
வேண்டாத ஆசைகளை தீயிட்டு கொளுத்திட
நினைத்தபோதெல்லாம்....
மழையாய் உன் நினைவுகள் வந்து..
மறுபடியும்..மறுபடியும் உன்னையே நேசிக்கவைக்கிறதே...
என்றாவது ஒருநாள்..
உன் நிலவொளியும் என் வீட்டு யன்னலில்
பட்டுத்தெறிக்கும்..
அதுவரை நினைவுகளைச் சுமந்து...
கனவுகளை மட்டும் வளர்கிறேன்.
வெள்ளி, 25 ஏப்ரல், 2008
தேடும் கண்பார்வை..
அத்தனை கண்களும் மாறிமாறிப்போகும் பூப்பந்தின் மீது...
அவரவர் மனதினில் போராட்டம்..
எந்த அணி வெல்லும் என்பதில் சந்தேகம்...
என் பூவிழியும் பந்துபோல் மாறிமாறி உருள்கிறது..
நீ வரும் வழிநோக்கி...
என்னதான் வெற்றி ஒருஅணிக்கு கிடைத்தாலும்...
நீ வராததால் தோல்விகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு....
உள்ளத்தில் வேதனையும் உதட்டில்வெறும் புன்னகை
மட்டும்...விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தேன்..
விதி என் வாழ்க்கையை விளையாட்டாக்கிவிட்டதே..
தோல்வியும் வெற்றியும் விளையாட்டுக்கு மட்டுமல்ல...
வாழ்க்கைக்கும் சேர்த்துதான்...வெறும் சமாதானத்தோடு களம் இறங்கிசெல்லுகிறேன் நான்.
.............................
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
வாழும் மனிதா..
வாழ்க்கைப் படகினில்
நீயும் வாழ
கடலைப்போல் நல்ல..
பரந்த உள்ளம் தேவை..
அடுத்தவரை நம்பி வாழாதே
உள்ளத்தில் தூய்மையும்
உண்மையான உழைப்பும்
உன்னிடத்தில் உயர்திருந்தால்
கடல் வற்றியும் _அலையோடு
போகாத படகிற்கு_ கயிறு
துணை நின்றது போல்
நாளைய வாழ்வில்
துன்பம் வந்து வாட்டினாலும்
உன் உள்ளமெனும் கோவிலில்
கவலைகளின்றி
நம்பிக்கை எனும் நூல்
வழிகாட்டியாகஅமையும்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
ஞாயிறு, 6 ஏப்ரல், 2008
வலம் வரும் நினைவுகள்...
உறங்காமலே விழித்திருக்கக்கூடும்....
அப்படியே ஆடாது நிறுத்தக்கூடும்..
புதன், 2 ஏப்ரல், 2008
சுகமான சுமைகள்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
அழியா நினைவுகள்
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
திருமணம்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
மறந்தாலும்....
நீ வருவாய் என...
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
இதுதான் காதலா...?
செவ்வாய், 1 ஏப்ரல், 2008
ஆசையில் ஓர் கடிதம்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி