திங்கள், 14 செப்டம்பர், 2009

பெண்ணே நீயும் பெண்ணா..


சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************

தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..

*************************************

பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ...

--------------------
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951

சுமைகள்..



பரந்த மனசு..அதனால்தானோ..
பலபேருடைய கோரிக்கைகளையும்..
நீ சுமக்கின்றாய்..

**************************************

நீயும் தாய் தான்..
தினம் சுமக்கிறாய்..
கடிதங்களாக..

**************************************
யார் செய்த சாபமோ..
நீ மட்டும் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறாய்..

***********************************

பாவம் நீ..
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறாய்..
வாயிருந்தும் ஊமை என்றபடியாலோ...

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10948

சந்தோசம்..

Glitter Graphics

மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10916