ஞாயிறு, 4 மே, 2008

மலர்ச்செண்டு.

நீலவானமாய் நானிருக்க..
அதில் சந்திரசூரியனாய் நீ...

முகிழாய் நானிருக்க..
தரைதொடும் மழையாய் நீ..

கரையாய் நானிருக்க..
கரைதொடும் அலையாய் நீ..

மரமாய் நானிருக்க..
மணம் பரப்பும் மலராக நீ..

கல்லாய் நானிருக்க..
சிலைவடிக்கும் சிற்பியாய் நீ..

விழியாய் நானிருக்க..
விழிமூடும் இமைமடலாக நீ..

எழுத்தாக நானிருக்க..
எழுதிவரும் சொல்லாக நீ..

இத்தனையும் இருந்தபின்பும்..
நமக்குள் மலர்செண்டு தந்து வாழ்த்தவேணுமா..?

எமக்குள் பிரிவு வேண்டாம்..
இருவரும் நட்பால் என்றும் ஒருவரே .

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: