புதன், 2 ஏப்ரல், 2008

சுகமான சுமைகள்.



முகமறியா முகவரியே

முதற்கண் வணக்கம்

உனைத் தெரியாத

எனக்கேன் அறிமுகம்


அண்ணனா, தம்பியா

அக்காவா, தங்கையா

உறவுக்காரனா, நண்பனா

யாரானாலும் யார் நீ


என்னிலை அறிந்து

எனக்கேன் அனுப்புகிறாய்

வாழ்த்துக்கள் கையில்

கிடைத்தபோது மகிழ்ச்சி


வருகின்ற நூல்கள்

சிறு சிறு கதைகள்

எல்லாமே நன்றாகவே

நாகரீகமாகவே உள்ளதே


பக்கங்களை புரட்ட

மனப் பக்குவம் இல்லையே

தொடர் கதையாய் நீயும்

சிறு கதைதான் நானும்


எனக்காக நீ அனுப்பியநூல்களால்

உனக்காகநூல்நிலையம் திறக்கலாம்

மறைக்காமல் சொல்லிவிடு

சொந்தம் என்ன எமக்குள்

சொல்லி விட்டு அனுப்பிவிடு


தயங்காதே தழிழரே

தந்திடுவாய் உன்நாமத்தை

அறிய ஆவல் தான்

பார்க்க ஆசைதான்


ஆசையால் நீ அனுப்பியதுபோதும் போதும்

உன் வாழ்த்துமடல்கள்

வாழ்க்கையில் மறக்கமாட்டேன்

சுகமான உன் ஊடல்கள்

சுமையான என்தேடல்களாயிற்று


.--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

அழியா நினைவுகள்



மார்கழியில் வந்த வானவில் தான் நீயும்

வந்த அடையாலம் தெரியாமல் போனாயோ...

என் அன்பால் குறையேதும் கண்டாயோ

கண்டிருந்தால் கனவிலும் எனை நினைக்காதே


நான் பிறந்த நாளை மறந்திருக்க

மறவாமல் வந்து அம்மணிக்கு வாழ்த்துவாழ்த்தியதை

நெஞ்சம் தான் மறக்குமா.

நெஞ்சம் உன்னோடு தான் தஞ்சம் என்று அறிவாயா


அறியாமல் எனை அறியாமல் ஆசை வைத்தேன்

தெரியாமல் யாருக்கம் தெரியாமல் அன்பை வளர்த்தேன்

புரியாமல் விடை தெரியாமல் காலத்தை கழித்தேன்

அறிந்தும் அறியாமல் செய்த குற்றத்தை நினைத்து நொந்தேன்


தெரிந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்ட புலவர் நீ

வருந்தி நானும் மனம்திருந்தி வருகையில்

பிரிந்துநீயும் போவது மனம் தான் தாங்குமா

தாங்கும் சக்தி உனக்கிருந்தால் எனக்கும் தந்துவிடு


தாங்கும் என் மனமும் தாங்கும்.

தங்கும்உன் நினைவுகளை அழித்து விட்டு

என் மனம்பிரியா என்னவரின் நினைவுகளோடு

என்றும் மனதினில் நிலையாய் வாழ்ந்திடுவேன்

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

திருமணம்.



மனம் இரண்டு, இணைந்தால் திருமணம்

மனம் வறண்டு வாழ்ந்தால் ஒரு மனம்

குணம் கொண்ட வாழ்வது சில மனம்

பணம் கொண்ட வாழ்கையில் பல மனம்,


தினம் வாழ்வதில் போராட்டம்

பணம் குவிப்பதில் தேரோட்டம்

சினம் கொண்ட வாழ்கையில் திண்டாட்டம்

மனம் கூடுகின்ற வாழ்கையில் கொண்டாட்டம்


இருமனம் திரு மணமாகி

திருமணம் ஒரு மனமாகி

விரு வென்று நாட்கள் தாவி

கரு என்ற கர்ப்பம் நிரப்பி


பல பேர் வாழ்வது தேன் அமுதம்

சில பேர் வாழ்வது வீண் பாரதம்

பல பேர் வாழ்வது கண்ணீர் நீரோட்டம்

சில பேர் வாழ்வது பன்னீர் குளிரோட்டம்


வாழ்கையிது நாம் வாழத்தான்

வாழும் வரை நாம் போராடத்தான்

காலமும் ஒரு நாள் கைகூடும்

காத்திருக்கும் நாளும் ஒரு நாள் திரு நாளாகும்..

--------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

மறந்தாலும்....



மறந்தாலும்....

உன்னை நீ...

மறந்தாலும் பறவாயில்லை...

என்னுள் இருக்கிறாய்...

என்றும் பத்திரமாய்...

விவாகரத்துப் பத்திரமாய்...

விடை தெரியாத வினாக்களாய்.

நீ வருவாய் என...



அன்பைக் கூட்டித்தந்து...

அறிவைப் பெருக்கிதந்து...

கசப்பான நினைவுகளை கழிக்கக்கற்றுத்தந்து...

நன்மை தீமையை பிரிக்கக் காட்டித்தந்து...


இன்று உன் அன்புக்காகஏங்கவைத்து...

அறிவை உன்னோடு மட்டும்அடகு வைத்து...

உன் நினைவுகளை மட்டும்..

கழிக்காது வளர்த்து..

உன்னையும் என்னையும்..

இன்று வரை பிரிக்காதுகாத்து நின்று...


இன்றும் வருவாய் என..

தண்ணீரில் அழும் மீனாகயாருக்கும் புரியாமல்..

கண்ணீர் விடுவதும்...

கண்ணீர் விடுவதை அறியாது...


இரை கிடைத்ததாய்..

காலைச்சுற்றும் மீனாக...

இல்லாத ஒன்றுக்காய்..

பொல்லாத நினைவுகளை சேர்த்து வைத்து

கவலையில்முகம் புதைக்கிறேன்...

நீ வருவாய் என...


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

இதுதான் காதலா...?



கண்களால் காணவில்லை...

வாய் மொழி வார்த்தை பேசவில்லை...

காதுகளினால் உன் குரல் கேட்கவில்லை...

உருவமும் கண்டதில்லை...


உள்ளத்தில் மட்டும் உன் நினைப்பு...

இதுதான் காதலா...?


எங்கோ....யாரோ...

என்னவோ கூறுகிறார்..?


அவனு(ளு)க்கும் அப்படியிருந்தால்...

அதுவும் காதல்தான்...

இல்லையேல் ஒருதலைக்காதல்...

நீரில் வரைந்த காதல் இதயவரைபடம் போல்....

வந்த தடயம் இல்லாமல் மறைந்தே சென்று விடும்.