சனி, 15 ஆகஸ்ட், 2009

நேசமுடன் வாழ்த்துகள்!

zwani.com myspace graphic comments

புதிய கவிதை புனையும்
கலைஞரே நெஞ்சில்
உண்டான காயம்தான் என்ன..

நினைவு அலைகள்
தினமும் துரத்திக்கொண்டிருக்க..
ஆற்றலையும் ஆக்கத்தையும்
நெஞ்சுக்குள் புதைத்துவிடலாமா..

கைவிலங்கு போட்டு
ஆதவன் கரங்களை
அடக்கிப் பார்ப்பது பாவமில்லையா

கண்ணுக்கு அழகான கவிதைகள்
நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் வரிகள்
அத்தனையும் எழுதும் இதயம்
இன்று கவி தொடர மனம் மறுப்பதும் ஏனோ..

கவி மாலையான பின்பு
காகிதத் தோள்களுக்கு
மாலையாவதற்கு தடைவிதிப்பதும் முறைதானோ..


தொடரும் கதைக்கு முற்றும் போடாமல்
முற்றும் துறந்தமுனிவரைப் போல்
கடும் தவமாய் காலத்தை வீணடிக்கலாமா..
எதிர் பார்க்கிறேன்.. வாழ்த்துக்களோடு எழு(து)வாய்..


அன்னையைப் போல்
அறிவுரைகள் சொல்லும்..
உண்மையைச் சொல்லவா..
அது உன் கவிவரிகளல்லவா..

சென்ற பொழுதைகளின் ரணங்களை
தேடிச்சென்றே நீயும் துன்பப்படாதே
நின்றே நீயூம் சாதித்து விடு..
புதுப்புது கவிதைகளை புனைத்துவிடு.