புதன், 4 ஜூன், 2008

தென்றல் காற்றே.




எத்தனை சுமைகளை தான்
இத்தனை நாள் பொறுத்திருந்தேன்..
ஏன் இன்னும் என்னை வெறுக்கிறாய்..

பட்ட காயம் ஆறமுன்
மறுபடியும் ஈட்டி கொண்ட கவியால்
என்னை தாக்குவதேன்..

செய்த குற்றம் தான்
என்னவென்று எடுத்துரைத்தால்..
செய்யாது மீண்டும் செயல்படுவேன்...

திட்டங்கள் தீட்டி தீர்த்து கட்டும்
திருடி அல்ல நான்
கவி திருடியல்ல நான்..

உற்றுதான் நீயும் நோக்கினால்
உண்மை விளங்கும் உனக்குமட்டும்
உயிருள்ள என் கவிவரிகளென்று..

செத்தவன் மீண்டும் வந்ததென்று
சரித்திரத்தில்லை..
சரித்திரம் சொல்லும் செத்தவன் புகழை என்றும்..

வையகம் எங்கும் உன் காற்று
தொட்டுச்செல்லும்..
தொட்ட தென்றல் என் மூச்சாய்
நின்று எனைக்கொள்ளும்.

பட்ட துன்பம் போதுமென்று
இவள் இட்ட நாமம் தனித்தியங்கும்..
இறுதி வரை தென்றல்பெண்ணாய்
வாழப் பழகும்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6816

கருத்துகள் இல்லை: