புதன், 25 ஜூன், 2008

முகவரி இல்லாத முகங்கள்.




அன்னையவள் கைபிடித்து
அடிமேல்அடி எடுத்துவைத்து
மெல்லப்பேசும் கிள்ளை மொழியில்
செல்லக்கதைகேட்க ஆசையாய் என்னைத்
தொட்டுத்தூக்கி உச்சிமுகந்த எத்தனை உறவுகள்

விட்டுப்பிரிந்த நாட்முதல் தேடுகிறேன்
முகவரி இல்லாத முகங்களை..

கல்விபயில கல்லூரி வாசலிலே
கவலைகள் மறந்து
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
பட்டதுன்பம் எதுவுமின்றி
பகல் இரவாய் பாடித்திரிந்து கூடி குதூகளித்த..

அந்த முகவரிகள் இல்லாத
அன்பான பள்ளித்தோழிகள்..முகங்கள் எங்கே..?

ஆலயத்திருவிழாவில்
அணிஅணியாய் கன்னியர்கள் நாம்
வீசப்படாத வலையாம், வாலிப வலையில்
விழுந்து சிக்கித்தவித்து தாவணியில் வலம் வர..
தவம் கிடந்து மனம் கசிந்த..

அந்த முகவரி தெரியாத முகங்கள்
இன்று எங்கெங்கோ எல்லாம் தேடுகிறேன்..

காலத்தின் வேதனைகளைச்சுமந்து..
கடல் கடந்து வேறு இடமாய்
கரை ஒதுங்கி
கண்கள் சந்தித்தவர்களெல்லாம்
நலம் கூறி விடைபெற்ற

அந்த நல்ல மனம் படைத்த
முகவரி இல்லாத முகங்களை தேடுகிறேன்.

இல்லத்தில் இருந்து இணையத்தில் வந்து
இதயத்தில் இடம் பிடித்து..
இன்னல்கள் வரும் போது
இறைவன் துணையாய் அருள் வாக்குத்தந்த

இந்த அன்பான உறவுகள் எம் முற்றத்து
முகவரி இல்லாத முகங்கள்.

இதுநாள் வரை
இப்படி நான் சிந்தித்ததில்லை...
இதை எழுத வைத்த உன்னை நான்
சந்தித்ததில்லை...இனிமேல் நானும்
மறந்துவிடப்போவதுமில்லை என்
எண்ணத்தில் நீயன்றி வேறெதுவுமில்லை...

நீயும் எனக்கு
முகவரி தெரியாத முகங்கள்.
( நிலாமுற்றம்)






--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

1 கருத்து:

mathy சொன்னது…

வாங்க திகழ்..
வருகைக்கும் தருகைக்கும் நன்றிங்க..