வெள்ளி, 14 நவம்பர், 2008

சினேகிதனே..


மூங்கில்லாக்காட்டில்..
வெறுமையை நிரப்ப வந்த...
சங்கீதமே..
மனம் நேசிக்கும் போதெல்லாம்
மனதோடு பேசும் சுவாசிக்கும்
தென்றலே...
என்ன எழுதினாலும்..
அதில் முதல் விமர்சகராய்
என்னை உற்சாகப்படுத்தும்
உன் வார்த்தைகள்..
தேடாத போதும் தேடி வரும்
உன் நினைவுகள்..
ஓயாத அலையாய்..
ஓடி வரும் உன் அழைப்புகள்..
அத்தனையிலும்
அதிர்ஸ்டசாலியாக நானும்
இப்புவி தனில் உன்னையடைய
என்ன வரம் வேண்டி வந்தேன்..
சினேகிதனே
உன் சினேகம்
சிறகடித்துப்பறக்கிறது.
மீண்டும் உன் சினேகவுறவு நிழல் நாடி.
-----------------------------------------
நிலாவில் உலா வரும் தனிமதி.

http://www.nilafm.com

கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..