திங்கள், 31 மார்ச், 2008

மலர்ச்செண்டு



நீலவானமாய் நானிருக்க..

அதில் சந்திரசூரியனாய் நீ...


முகிலாய் நானிருக்க..

தரைதொடும் மழையாய் நீ..


கரையாய் நானிருக்க..

கரைதொடும் அலையாய் நீ..


மரமாய் நானிருக்க..

மணம் பரப்பும் மலராக நீ..


கல்லாய் நானிருக்க..

சிலைவடிக்கும் சிற்பியாய் நீ..


விழியாய் நானிருக்க..

விழிமூடும் இமைமடலாக நீ..


எழுத்தாக நானிருக்க..

எழுதிவரும் சொல்லாக நீ..


இத்தனையும் இருந்தபின்பும்..

நமக்குள் மலர்செண்டு தந்து

வாழ்த்தவேணுமா..?


எமக்குள் பிரிவு வேண்டாம்..

இருவரும் நட்பால் என்றும் ஒருவரே .

அதிகாலை மலர் அது.



அதிகாலை துயிலெழுந்து..

ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..

விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..

படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..


பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..

பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..

புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..


புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய,

அதை எடுத்துபக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....

ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..

ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..

அப்படியே மடிப்புக்குலையாதவாறு

ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..


நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..

திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..

வாளியோடு தண்ணீர்எடுத்து,

வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..


அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..

வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..

எறும்புப் பட்டாளப்படையின்

விருந்துண்ண வருகைகண்டு..

எதிரில் நானும் அதை ரசித்தபடி..


எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..

சோர்ந்துபோகாது..

என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும்

நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...


இன்றாவது கோழிக்குஞ்சு

முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..

சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..


ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில்,

ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...

மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு.

பட்டுக்குஞ்சை..இருகைகளாலும் பொத்திப்பிடித்து,

தொட்டு மகிழ்ந்த..

இனிய அந்த நாட்கள் இனிவருமா...?


அதுமட்டுமா...அன்று பூத்த மலர்களை,

மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..

அதிகாலை பிராத்தனைக்காக

ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..


அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...

அன்றைய காலைப்பொழுதில்,

அதிகாலை மலராக நானும்அனைவரோடும்

அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று

அதிகாலை மலர் நானாக

மலர் போல மகிழந்திருந்தேன்..


பொன்னான அந் நாட்கள்,

இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..

பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன்.


மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.

பட்டபாடும், அடைந்த மகிழ்வும்

நாள்முழுக்க எழுதினாலும்..யாருக்கும் புரியாது..

அந்த மன நிலை.


யாருமே பக்கத்திலின்றி,

பழசையெல்லாம் மனதில் போட்டு

பதிவாக்கிறேன் ஏனோ இன்று.
www.nilafm.com

தென்றல்..



இயந்திரமயமான உலகில்..

இயந்திரங்களோடு எட்டுமணிநேரவேலை பார்த்து..

வேதனையில் வெளியேற..


அதிகாலைப்பொழுதில்..

உடலும் உஷ்ணமடைய...

உள்ளமும் தளர்ச்சி காண..

உதயத்திற்கு முன்னாடி..

கடமைகளை முடித்தவளாய்..

காடோ, வீடோ நம்ம நாடே..

நல்லது என்று எண்ணியவளாய்..

நடையைக்கட்ட வீடு விரைய...


அற்புதமான தென்றல் ஒன்று..

மெல்லத்தழுவிக் கொண்டு..

கொண்ட துன்பம் அத்தனையும்..

துடைத்தெறிந்து மனத்தீபம் ஏற்றிச்சென்றது.

உள்ளம் பேசுகின்றது.














எங்கையோ..பிறந்து வளர்ந்து..
எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட..நாம்..
இன்று மண்ணுக்கடியில் இருக்கும்...
வேர்கள் போல...மனதி்ற்குள் மட்டும்..
ஆழப்புதைத்து.. நினைவுகளை மட்டும் படரவிட்டு...

அழும் குழந்தை..
அன்னை குரல் கேட்டு...
அடங்குவது போல....

இன்னும் உன் ஓசைக்காக...
அது இசையாக வரும் இனிய கீதத்திற்காக...
எண்ணப்பறவைகளை ...சிறகடித்து பறக்கவிட்டு..
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

ஆகாயப்பறவை போல..நீ....உயரத்தில இருப்பதால்...
அங்கிருந்து பார்க்கும் போது...
என் அன்பும், நட்பும் மிகச்சிறியதுதான்...

வா...ஒருமுறை...என் இடத்திலிருந்து பார்...
மெளமான என் உள்ளம்...
சொல்லும் கதைகள்..உனக்குப் புரியும்.

சனி, 29 மார்ச், 2008

நாணமா...?


தாமரையே...
உன் முகம்
மலர்ந்து சிவந்தது....
நான் வந்ததாலா...?
நாணத்தாலா...?

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

பரிசுப் பேனா...


இன்னும் உன் ஞாபகமாக...
என் கைப்பையினுள்.....
இறந்த உடலை
சுமப்பது போல...
பயனற்றதாய்ப்போன
பேனா..பத்திரமாக.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

நீ வருவாய் என...

அன்பைக் கூட்டித்தந்து...
அறிவைப் பெருக்கிதந்து...
கசப்பான நினைவுகளை
கழிக்க கற்றுத்தந்து..

நன்மை தீமையை
பிரிக்கக் காட்டித்தந்து...
இன்று உன் அன்புக்காக
ஏங்கவைத்து...

அறிவை உன்னோடு மட்டும்
அடகு வைத்து..
உன் நினைவுகளை மட்டும்..
கழிக்காது வளர்த்து..

உன்னையும் என்னையும்..
இன்று வரை
பிரிக்காது காத்து நின்று...
இன்றும் வருவாய் என..

தண்ணீரில் அழும்
மீனாக யாருக்கும் புரியாமல்..
கண்ணீர் விடுவதும்...
கண்ணீர் விடுவதை அறியாது...

இரை கிடைத்ததாய்..
காலைச்சுற்றும் மீனாக...
இல்லாத ஒன்றுக்காய்..
பொல்லாத நினைவுகளை
சேர்த்து வைத்து

கவலையில்முகம் புதைக்கிறேன்...
நீ வருவாய் என...

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி