திங்கள், 23 பிப்ரவரி, 2009

தீராத கொடுமை தீருமா...?




தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா



ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?