வெள்ளி, 2 அக்டோபர், 2009

உள்ளத்தில் கலந்த உறவே..‏



பழகிய நாட்கள்..
பசுமையான நினைவுகள்..
பல ஆண்டுகளாக
நினைக்க மட்டும்தான்
என்றே என் மனம் ஏங்க..

அதிகாலைப்பொழுதினில்..
காலைத் தென்றலாய் நீ
காற்றலையில் கடமையாற்ற

தூரத்து மல்லிகையின்
மணம் காற்றோடு கலந்து
உள்மூச்சில் விழுந்தது போல்..

நீங்கதானே..என்று
என்னை இனங் கண்டு கொண்ட
அன்புள்ள கிருஷ்ணா..

ஆண்டுகள் பல கடந்தபின்பும்..
ஆடிப்பாடித் திரிந்த கதைகள் நீ சொல்ல..
அதை இடைநிறுத்தி அதன் தொடர் நான் சொல்ல..
நீயூம் நானும் பின்னோக்கி அந்தப் பருவத்திற்குச் செல்ல..

ஒரு நாள் நீடிக்காத
சின்னச் சின்ன கோபங்கள்..
பொய்யான பந்தையங்கள்...
களவாய்ப் பிடுங்கும் மாங்காய்கள்

பார்த்த படங்கள்...

ம்....இதுவரை
யாருமே பார்க்காத பக்கங்கள்..

ஓ..அத்தனையும்
நினைத்துப் பார்க்கிறேன்..
மலரில் விழுந்த மழைத்துளியாய்..
என் கண்ணில் முத்தாய் கண்ணீர்த் துளிகள்..

பலவர்ண நிறங்களில் தினம்
பூத்து மணம் பரப்பும் பூக்களாய்

எனது சகோதரர்களும்..
உனது சகோதரர்களும்..
ஒன்றாகச் சேர்ந்து..
முற்றத்தில் பூத்துக்
கைகோர்த்து திரிந்த நாட்களை
அந்த முற்றம் கூட மறந்து விடாது..

போகிற திசை தெரியாமல்..
ஓடுகின்ற அருவி போல்..
நேரம் போவது தெரியாமல்
நெடு நேரம் பேசிக்கொண்டேயிருக்கிறோம்..

ஓடிக்கொண்டு இருக்கும் கடிகாரம்..
அடித்துக்கொண்டிருக்கும் இசைபோல்..
ஓயாது என் நினைவில் உன் எண்ணம்..

சரியாக இடப்பட்ட முகவரி
காலம் கடந்தாலும்..
கை வந்து சேருவது போல்..
உண்மை அன்பை நெஞ்சார நேசித்த
எங்கள் உறவு பல ஆண்டுகள் கடந்த பின்பு
காற்றலை சேர்த்து வைத்து விட்டது..

என் சகோதரிகள் சார்பாக
உன்னைக் கேட்கிறேன்..
எங்காவது போவதாகயிருந்தால்
சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்..

உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்..
உன்னைக் காணவில்லையே என்று
ஏங்கிய இதயத்தின் வலியை
மீண்டும் உருவாக்கிவிடாதே..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11045