வியாழன், 31 டிசம்பர், 2009

ஆண்டு 2010 வருக!! தருக!!




எண்ணற்ற துயரமதில்
எம்மவர் உட்பட
எண்ணிலடங்கா மானிடர்கள்..
ஏன் பிறந்தோம் என வேதனைப்பட..

பட்டதெல்லாம் போதும்..போதும்..என
பகலவன் ஒளி போலே
அவனவன் வாழ்வும்..
அமைய வேண்டி
ஆண்டே இரண்டாயிரத்துப்பத்தே வணங்குகின்றேன்..


இன்றைய இளைஞர்களின்
இரும்புக்கரங்களில்
நன்றே செயலாற்றும் வல்லமை
கிடைத்திட இறைவனருள் துணைபுரியவேண்டும்..

வென்றே தீருவோம் என
நன்றே செயல்படும்
நானிலங்களிலும் நல்லவுள்ளங்களின்..
நன்மையில் கண்ணே கருத்தாகயிருக்க..
ஆண்டே இரண்டாயிரத்துப் பத்தே வருக! தருக!!

அக்கினிப் பிழம்புகள்
அகிலத்தை அழிக்காதிருக்க..
அணு ஆயுதங்கள் அவதரிக்கலாகாதவாறு..
அமைதி பேண வேண்டும்..

இனம், மொழி, நாடு வேறாயினும்..
இயன்வரை அன்பு ஒன்றால்..
இவ்வையகமே இன்புற்றிருக்க..
இரண்டாயிரத்துப் பத்தே நலமுடன் வருக! வருக!!




திங்கள், 28 டிசம்பர், 2009

சில நிமிடங்களுக்கு முன்


காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்..

திங்கள், 21 டிசம்பர், 2009

யாரோ அவர் யாரோ..



ஆண்டு பத்து முடித்தபிறகு..
எனை ஆளப்போகும்
மன்னன்தான் யாரோ என்றறிய..

ஆலய வாசலிலே
அமர்ந்திருந்த
கிளி ஜோசியரை நாடினேன்..

ஒன்றன்பின் ஒவ்வொன்றாக
எடுத்துப்போட்டுக்கொண்டேயிருந்த கிளியிடம்..
சீக்கிரம் எடேன் கிளி என்றேன்..

ஆஹா....கூறியது புரிந்துவிட்டதோ என்னவோ...
என்னதான் அதில் என்று என் மனம் ஆவலாகயிருக்க...
வந்த படம் குதிரையில் ஓர் அரசன்..

மங்கையிவள் மனதாள..
மன்னன் அவன் வருவான் மணமுடிக்க..
சீர் கொண்டு வருவான் சிங்காரத்தேரிலவன்..

அடடா அன்றிரவு முழுக்க எனக்கேது நித்திரை..?
சித்திரையில் வருவானோ..
சிங்காரவேலனாக வருவானோ..

எப்பொழுது வருவான்..
எப்படி வருவான்..? எத்திசையிலிருந்து வருவான்..
எண்ணி எண்ணியே விடிந்தது பொழுது..

சாஸ்திரம் பார்க்கலையோ கை சாஸ்திரம்..
யாரோ ஒரு அக்கா
கையில் ஒரு புல்லாங்குழலோடு உரத்த குரலில் சொல்ல..

ஆஹா...கிளி சொன்னது சரியா எனக் கேட்டுப்பார்ப்போம்..
கல்வி என்றா, செல்வம் என்றா, ஆயுள் என்றா அப்புறம் என்றா..
அட அதை எல்லாம் விட்டிட்டு என்னை கட்டிக்க யாரு வருவான் அத சொல் என்றேன்..

வடக்கிலிருந்து வருவான்..
வக்கீலாக வருவான்..
வள்ளலாகயிருப்பான், வல்லவனாகவும் இருப்பான் என்றா..

அப்போ கிளி சொன்னது.....???

அன்றிரவும் கெட்டது தூக்கம்..

அம்மாவிடம் பத்திரமாகயிருக்கும்
எனது குறிப்பைக் கேட்டேன்..
எதுக்கோ...? கேள்வியோடு ஒரு பார்வை..

படிச்சு என்னவாகப் போறேன் என்று..
இந்த கொப்பியில இருக்காமே நண்பி சொன்னாள்..
சரி இந்தா கவனமாகத் திருப்பி தா..

ஆஹா....அவ்வளவு நம்பிக்கை என்மீது..
மணவறையில் மாலையிட வரும் மன்னன்தான் யாரோ..?
ஒரு வரிவிடாமல் பக்குவமாய் தேடியது கண்கள்..

பெற்றோர் பார்க்கும் வரன் அமையும்..
உறவினர்களுக்குள் பொருத்தம் உண்டாம்..
திருமண வயது தள்ளிப்போகும்...


ஆஹா....இவர் எழுதியது தான் உண்மையானதோ..
பேர் பெற்றவராச்சே தவறாகக் கணிக்க மாட்டார்..
கனவுகளோடு மிதந்த காலம்..

திடீரென ஆஜரானார்...
கண்களால் மோதிக்கொண்டார்..
அப்பொழுது குடியேறிவிட்டார் இதயத்தில்..

கிளி சொன்னதும்..பொய்.
குறத்தி சொன்னதும்..பொய்..
கிரகங்களைக் கணிச்சு முற்கூட்டியே எழுதிய சாஸ்திரமும் பொய்யாகிவிட்டதே..

எது எது எப்போது நடக்குமோ..
அது அது அப்போது நடக்கும்..
அதுதான் யதார்த்தம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12294
போட்டோ: அரவிந்தன்(கூகிள் நெட்)

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..2

முன்னால் காதலனே
கண்முன்னால் கண்ட உன் மடல்..
கண்டு இதயம் டைப்படிக்க
என் விரல்களும் டைப்படிக்கிறது..

நல்ல செய்தி ஒன்று கூறினாய்..
நீ தண்டனை பெறுவதாக..
ஆஹா....அதற்காக நான் செய்த
பிரார்த்தனைகள் வீண் போகவில்லை...

சித்திரகுப்தாவிற்கு பதிவிலிடுகிறேன்..
சித்திரவதைகளைக் கூட்டி
சிறையிலிடும்படி..
சிந்தனை செய்யாதே..தப்பிக்கலாம் என்று..

பெண் என்றால் பேயும் இரங்குமாம்..
பேய் என்றால் நானும் இரங்குவேன்..ஆனால்..
நீயோ...பேயுமில்லை பிசாசுமில்லை..
துரோகி...மன்னிக்கவே முடியாத பாவி நீ..

நிலவு போல நீ வந்தால்..
வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டிருப்பேன்..
வெளிச்சம் போல வேஷம் போட்டாய்..
விழுந்து நானும் எரிந்தது போதும்..நோ எக்ஸ்கியூஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234&pid=152316&mode=threaded&start=#entry152316

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..




அன்பே நலமா..
சொர்க்கத்திற்கு வந்த நான்..
உனக்குச் செய்த துரோகத்தால்
நரகத்திற்கு தள்ளப்படும் நிலையில் தவிக்கிறேன்...

நரக வேதனைகளுக்குப் போகும் முன்..
நான் உனக்கு அனுப்புகிறேன் ஓர் மின்னஞ்சல்..
நடந்ததெல்லாம் மறந்து இதை ஏற்றுவிடு..

என்ன இடையூர்கள் வந்தாலும்..
என்னவள் நீயன்றோ வேறொருத்தியுமில்லை
என்றுனக்குச் சொல்லிவிட்டு..

அன்றவன் தந்த ஐடியா கேட்டு..
அநியாயமாக உன்னைக் கைவிட்டுவிட்டேன்..
அதுமட்டுமா என் கண்ணே..

பொல்லாத பெண் ஆசையில்..
இல்லாததெல்லாம் சொல்லியுன்னை..
இழிவு படுத்திவிட்டேன்..

பொல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
கல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
புழுவால் என்னை குளிப்பாட்டி எடுக்கிறார்களே..

எங்கே நான் போய்ச்சொல்ல..
என்னவளே எனக்காக இரங்கி ஒரு மெயிலிடு..
எமன் அண்ணா யோசித்து தண்டனைகளை குறைத்துவிடுவார்.

அடுத்த மின்னஞ்சல் வருமுன்..
ஆருயிரே மன்னித்து மனமிரங்க மாட்டாயா..
மறு பிறப்பு ஒன்றிருந்தால் மனம் வந்து மணமுடிப்பேன் உன்னையன்றோ.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234(பதில் போகும்..)

புதன், 25 நவம்பர், 2009

மீளாத சோகம்..


மீளாத சோகம்..எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே..

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே..

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே..

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே..

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்..

நிலவே கலங்காதே..




ஓ....நிலவே
நீயும் அழுகிறாய்...
கவிஞர்களுன்னை கவிவரிகளால்
கலங்கப்படுத்தி விட்டார்கள் என்றா..?

தேய்ந்து தேய்ந்து வளருகிறாய்..
என்றதால்...உன்னை..
வருத்தி வருத்தி அழுகிறாயா..?

நாடுகள் பலவற்றிலிருந்து வந்து..
தேடுதல் பலவாயிரம் செய்து..
உன்னை நாசமாக்கி படமெடுத்தார்களென்றா..?

துணையேதுமில்லாமல்..
தனித்து விடப்பட்டு..
மேகத்தின் ஆடைபட்டு..
விதவைபோல் காணப்படுகிறாய் என்றா..?

இத்தனை கேள்விகளை கேட்டு..
இன்னும் உன்னை அழவைக்கிறேன்..
உன் அழுகைக்கு நானும் ஒரு காரணம்..
மன்னித்துக்கொள் நிலவே...

படித்தேன் உன்னைப்பற்றியதோர் செய்தி..
நிலவிலும் நீர் உண்டாம்..

எழுந்தது எனக்குள்ளே பல கேள்வி..
அதனால் கேட்டேன்
பதில் கூறு...ஏனெனில் நானும் அழுகிறேன்..
விடையே இல்லாத கேள்விகளைக்கேட்டு..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11638

அதி காலைப்பொழுதில்..




அதிகாலைப் பொழுதில் நடந்து பார்..
உன் காலடி ஓசையைத் தவிர..
எந்த ஓசையும்
உனக்கு கேட்காது..

கண்கள் காணும்
காட்சிகளை ரசித்துப் பார்..
கவலைகள் எதுவும் மனதில்
கிட்ட நெருங்காது..

புதிய நாளை இன்முகத்தோடு..
வரவேற்றுப் பார்..

காக்கை கூட உன் அருகில்
வந்து கவி பாடும்..
தாவிச் செல்லும் அணிலும்..
ஓடி வந்து உன் தோள் சாயும்..

படபடவென்று பட்சிகள்...
ஒன்றாகப் பறந்து..
இயற்கையை ரசிக்க..
நேர் வரிசையாகயிருந்து
மின் கம்பியில் ஊஞ்சலாடும்..

தத்தி தத்தி
சின்னக் குருவிகள்..
கொத்தி கொத்தி இரை தேடும்..

வீட்டைக் காக்கும் நாய் கூட..
வீதி வரைக்கும் வந்து..
வாலை ஆட்டி மகிழ்ந்துகொள்ளும்..

அதிகாலைத் தென்றல்..
உலா வரும் நேரம்.. மெல்லிய குளிரில்
உன் தேகம் நனைந்து
மனம் களிப்புறும்..

வீதிகளுக்கு விடைமுறை
கிடைத்தது போல்..
எந்த போக்குவரத்து சலனமுமில்லாமல்..
அமைதியாக உறக்கம் கொள்ளும்..

எங்கிருந்தோ வந்த பூனைக்குட்டிகள்..
கால்களை உள்ளே மடக்கி..
மெல்ல தலையைக்குனிந்து
ஒன்றையொன்று பார்த்து
புன்முறுவல் செய்யும்..

மெல்ல வீசும் காற்றில்..
காகிதச் சருகுகள்..
ஓடி ஓடி ஓய்ந்து கொள்ளும்..

புத்தம் புது மலர்கள்..
பனித்துளிகள் பட்டு..
முகம் கழுவிக்கொள்ளும்..

ஞாயிறு வருகை கண்டு..நாணத்தால்
திங்கள் மெல்ல தன் முகத்தை..
மேகத்துனுள் ஒளித்துக்கொள்ளும்..

ஒளிரும் நட்சத்திரங்கள்..
விடியும் பொழுதில்..
தம் போர்வைக்குள்..
முடங்கிக் கொள்ளும்..

அதிகாலைப் பொழுதில்
நடந்து பார்..
மனம் அமைதியாகயிருந்து....
புது ராகம் இசைக்கும்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11538

சனி, 21 நவம்பர், 2009

கவிதை பாடும் அவள் இதழ்




இதழ்கள் விரிப்பழகில்..
உன் இதழ்களின்
சிரிப்பைக் கண்டேன்..

********************************

இதழ்கள் விரித்து..
இந்த ரோஜா
இதயம் மலர்ந்து..

முகம் சிவந்தது..
நாணத்தாலா..
நான் வந்ததாலா..


*********************************
யாரோ சொல்லிக்கொண்டு
போகிறான்..
அவள் இதழ்களைக் காணவில்லை என்று..
பையித்தியக்காரனவன்..
இதழ்களை காணத் தவறிவிட்டான்..

**********************************

கரு வண்டுகளும்..
உன்னைக் காதலிக்கின்றவோ..
வைத்த கண்வாங்காமல் பார்க்கின்றதே...

**********************************

இதழில் தேன் குடிக்க..
இமைகளில் கரு வண்டுகள்..
வட்டமிட்டு கவி பாடுகிறதோ..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11536

உன்னில் காதல்..


மனதோடு பேசிப் பேசி..
வார்த்தைகளை உதிராமல்..
பேசிய வார்த்தைகளை பகிர்ந்து..

நித்தமும் அச்சடிக்க..
உன்னை மட்டும் காலிக்கிறேன்
உனக்கும் சொல்லாமலே..

நிலவுத் தாய்..




வருவாய் தருவாய்..
அருள்வாய் எனதுயிரே..
துயர் கொண்ட எனதுள்ளம்..
துடைத்திட விரைந்தோடி வருவாய்..

தினம் உன்னையே அழைத்தேன்..
மனம் தினம் பலமுறை தொழுதேன்..
மனம் கனத்து தினம் அழுதேன்..
சினம் கொண்டு நான், நீயின்றி துடித்தேன்..

தூறல் மழையில் நான் நனைந்தாலும்..
துடித்துப்போய் சேலைத்தலைப்பால் தலைதுடைத்திடுவாய்..
கார் இருளில் கைபிடித்து கண்சிமிட்டும் நட்சத்திரமாய்..
பார் முழுதும் பவணி வரும் நிலவும் நீதான் என் அம்மா.

உள்ளம் முழுதும் உந்தன் எண்ணம்..
கள்ளம் ஏதும் இல்லாத கொள்ளையின்பம் கண்டேன்..
வெள்ளம் போல் கொண்ட பாசம் தரவா..
தர வா..எனதுயிர் தாயே என்னோடு வா..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வஞ்சக வலையில்..


மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு

அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..

ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...

அவனுக்கென்ன..

மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..

அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..

அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து

அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..

(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

படத்தில்..


வீடெல்லாம் ஒப்பாரி..
பாட்டி இறந்து விட்டார்....
அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11190

விதவை



தான் விதவை என்று தெரிந்தும்..
அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்..
என் அக்காவிற்கு....

நிஜம்


நானும் அண்ணாவும்
சண்டைபோடுகின்றோம்..
அப்பா சிரித்துக்கொண்டிருக்கிறார் புகைப்படத்தில்..

உயிர் காதலர்கள்...

Etnies

Click Here For Images &
Etnies Pictures

இணை பிரியாத
உயிர் காதலர்கள்...
ஒரு ஜோடி பாதணிகள்..

நற் செய்தி



நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..

ஆன்மாவின் சிந்தனையில்..



ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்..
என் தாயின் தலாட்டு..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11179

அவலம்..


ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************

வாழ்ந்து பாரு...



ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..

உன்னை நீ முதலில்
உணர்ந்து கொள்ளு..
பிறருக்கு..
உண்மையாக நடந்து கொள்ளு.

நாளைய நாளில்
நம்பிக்கை கொள்ளு..
நான் நான் என்ற அகங்காரத்தை
விட்டுத் தள்ளு.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11094

தீபாவளி..



பட்டாசு கொளுத்தி..கோலாகலமாக
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டது..
தெருக்கலெல்லாம் அலங்கோலமாக காட்சி தந்தபடி..


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11239

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பாடமறந்த பூங்குயில்..



திருமணம் என்னும் பந்தத்தில்..
உருவான பெண்ணே..
உருகும் உன் மனநிலை கண்டு
கலங்குகின்றேன் நானே..


மாலையிட்ட சொந்தம்
காலங்கள் செல்லச்செல்ல..
வேதனையும், சோதனையும் தந்து..
உன்னை வாட்டி வதைப்பதை
நினைத்து கலங்கிநிற்கின்றேன்..

பண்பாக நடந்து கொண்டால்..
அன்பாக எடுத்துச் சொல்லலாம்..
பிரச்சனை என்று வந்தால்
பேசித் தீர்த்து வைக்கலாம்.

பிரச்சனையே அவரானால்..?
எதையும் தாங்கும் இதயம்
உனக்கு வேண்டும்..

ஆணவம் தலைக்கேறி
அடாவடித்தனம் செய்யும் போது
யார் சொல்லி என்ன பலன்..?

பிரிவு என்ற சொல்லுக்கு
இலகுவில் பாலம் அமைத்துவிடலாம்..
அமைத்த பாலத்தில் வாழ்க்கைப் பாதையை
சிறப்பாக அமைக்கலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே..

காற்றடித்து மூங்கில் முறிந்துபோவதில்லை..
கூட்டுக்குள் வாழும் கிளி ஊமையாய் வாழ்ந்ததில்லை..
அலைகள் அடிப்பதால் மீன்கள் கரைவந்து சேர்வதில்லை..
இருண்ட பொழுதும் புலராமல் போனதில்லை..

நேற்று வரைக்கும் இரவினில் நீ
தலையணையை நனைத்தது போதும்..
அழுவதால் தொடரும் துயர் தீரப்போவதில்லை..
பரந்தவானில் அன்புள்ளங்கள் நிறையவுண்டு..
மனம் தளராமல் அதைப்புரிந்து வாழப்பழகிக்கொள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

உள்ளத்தில் கலந்த உறவே..‏



பழகிய நாட்கள்..
பசுமையான நினைவுகள்..
பல ஆண்டுகளாக
நினைக்க மட்டும்தான்
என்றே என் மனம் ஏங்க..

அதிகாலைப்பொழுதினில்..
காலைத் தென்றலாய் நீ
காற்றலையில் கடமையாற்ற

தூரத்து மல்லிகையின்
மணம் காற்றோடு கலந்து
உள்மூச்சில் விழுந்தது போல்..

நீங்கதானே..என்று
என்னை இனங் கண்டு கொண்ட
அன்புள்ள கிருஷ்ணா..

ஆண்டுகள் பல கடந்தபின்பும்..
ஆடிப்பாடித் திரிந்த கதைகள் நீ சொல்ல..
அதை இடைநிறுத்தி அதன் தொடர் நான் சொல்ல..
நீயூம் நானும் பின்னோக்கி அந்தப் பருவத்திற்குச் செல்ல..

ஒரு நாள் நீடிக்காத
சின்னச் சின்ன கோபங்கள்..
பொய்யான பந்தையங்கள்...
களவாய்ப் பிடுங்கும் மாங்காய்கள்

பார்த்த படங்கள்...

ம்....இதுவரை
யாருமே பார்க்காத பக்கங்கள்..

ஓ..அத்தனையும்
நினைத்துப் பார்க்கிறேன்..
மலரில் விழுந்த மழைத்துளியாய்..
என் கண்ணில் முத்தாய் கண்ணீர்த் துளிகள்..

பலவர்ண நிறங்களில் தினம்
பூத்து மணம் பரப்பும் பூக்களாய்

எனது சகோதரர்களும்..
உனது சகோதரர்களும்..
ஒன்றாகச் சேர்ந்து..
முற்றத்தில் பூத்துக்
கைகோர்த்து திரிந்த நாட்களை
அந்த முற்றம் கூட மறந்து விடாது..

போகிற திசை தெரியாமல்..
ஓடுகின்ற அருவி போல்..
நேரம் போவது தெரியாமல்
நெடு நேரம் பேசிக்கொண்டேயிருக்கிறோம்..

ஓடிக்கொண்டு இருக்கும் கடிகாரம்..
அடித்துக்கொண்டிருக்கும் இசைபோல்..
ஓயாது என் நினைவில் உன் எண்ணம்..

சரியாக இடப்பட்ட முகவரி
காலம் கடந்தாலும்..
கை வந்து சேருவது போல்..
உண்மை அன்பை நெஞ்சார நேசித்த
எங்கள் உறவு பல ஆண்டுகள் கடந்த பின்பு
காற்றலை சேர்த்து வைத்து விட்டது..

என் சகோதரிகள் சார்பாக
உன்னைக் கேட்கிறேன்..
எங்காவது போவதாகயிருந்தால்
சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்..

உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்..
உன்னைக் காணவில்லையே என்று
ஏங்கிய இதயத்தின் வலியை
மீண்டும் உருவாக்கிவிடாதே..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11045

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

சுகமான நினைவுகள்..

வாசலில் பார்த்திருப்பேன்..
அவன் வருகை கண்டு
உள்ளம் உவகை கொள்வேன்..

சுற்றவர நீலமும் சிவப்பும் கொண்ட...
கவரை அவன் கையில் கண்டவுடன்..
துள்ளிக் குதித்து ஓடிச்சென்று பெற்றிடுவேன்..

பரவசமாக படித்திடுவேன்..
பக்கத்து தோழியிடம் கொண்டே காட்டிடுவேன்..
கண்டவர் நின்றவர் எல்லோரிடமும்..

சந்தோசமாகச் சொல்லிடுவேன்..
என் அவர் எனக்கு அனுப்பிய கடிதம்..என்று..
ஓடி ஓடி உரக்கச் சொல்லுவேன்...

அன்பான முத்தங்கள் அதில் நிறையவுண்டு..
அள்ளி மணந்திடும் மல்லிகையும் அதிலுண்டு..
எண்ணங்கள் யாவும் எண்ணிலடங்கா சேதிகள் அதிலுண்டு..

குறைந்தது 8 பக்கங்கள் ஒரு கடிதத்திலுண்டு..
ஓரவிழிப் பார்வையில் பார்க்கும் போது..
யாரும் பார்க்கிறார்களோ என்ற எண்ணமுமுண்டு..

ஆயிரம் முத்தங்கள் அதிலிடுவேன்..
இரவுப் பொழுதினில் இருட்டினிலும் படித்திடுவேன்..
இருவிழி கண்ணீர் வழிந்தோட..இருபது தரம் படித்திடுவேன்..

நெஞ்சோடு அனைத்தபடி..
நிலவு மட்டும் விழித்திருக்க..
நினைவுகளால் விழி நீரால் நிறைந்திருக்கும்...

கனவுகள் மட்டும் வாழ்க்கையாய்..
நினைவுகளில் கதைகள் பல சொல்லி..
காலங்கள் கடிதஉறவில் மலர்ந்திருக்கும்..

நினைத்துப்பார்க்கிறேன்...
நிஜங்களை நினைக்கும் போது..
நிழல்கள் கூட சுகமான கதைகள் தான்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வண்ணனின் உண்மை வரிகள்..

Glitter Graphics


அருமை என்பது,
யாழ்ப்பாண ஒடியல் கூழ்
பெருமை என்பது,
என் தாயிற்கு மகனாகப் பிறந்தது

சிறுமை என்பது,
நான் டுபாயில் வாழ்வது
வறுமை என்பது,
நான் பாசத்திற்காக ஏங்கியது

கொடுமை என்பது,
வன்னியில் மனிதர்களை நிர்வாணத்துடன் வைத்து சுட்டது
கடுமை என்பது,
எனது உழைப்பு

இனிமை என்பது,
உங்கள் தமிழை படிப்பது.

வண்ணனின் உண்மை வரிகள்..
(எனது முகவரிக்கு அஞ்சலிடப்பட்ட தம்பி அபிவண்ணனின் வரிகள்)



திங்கள், 28 செப்டம்பர், 2009

வாழ்வு உன் கையில்.


மரம் நிலைக்க
அதன் வேர் காரணம்..
அதுவே நீடுழி வாழ..
நல்ல வளமான மண் காரணம்..

நீ வாழ..
பெற்றோர்கள் காரணம்..
உன் வாழ்வு செழுமை பெற..
உன் மனம் தான் காரணம்..

நல்லதையே நினை..
நன்மையே செய்..
உள்ளத்தால் உண்மையாய் நட..

உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்..
உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை..
உன் வாழ்வு உன் கையில்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11002

வழி(லி)


முட்டி முட்டி தலைமுழுக்க வலி..
வழி தேடி தவிக்கும்..
தொட்டி மீன்கள்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10989

வேண்டுதல்..


எந்தச் சாமிக்கு வேண்டுதலோ..
இலைகளை மட்டும் உதிர்கின்றனவே
மரங்கள்..(AUTUMN)

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

வெளிச்சம்..



எந்தச் சந்தர்ப்பத்திலும்..
ஏழைக்கென்ன கவலை
இலவசமாய் நிலா வெளிச்சம்..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

ஐயோ பாவம்..


ஏழையின் சிரிப்பில்..
இத்தனை அடிகளா..
காந்தியின் முத்திரை..

_______________________
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 14 செப்டம்பர், 2009

பெண்ணே நீயும் பெண்ணா..


சோலை ஒன்று நடந்து வருகிறதே..
சேலை கட்டி என் முன்..
நீ வரும் போது..
************************************

தண்ணீர் இல்லாமலே..
மீன்கள் நீந்துகின்றனவே..
உன் விழிகளில் பார்க்கிறேன்..

*************************************

பூக்கள் கூட மண்டியிட்டு..
உன் தோள் சாய்கின்றனவே..
நீ அருகில் இருப்பதாலோ...

--------------------
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10951

சுமைகள்..



பரந்த மனசு..அதனால்தானோ..
பலபேருடைய கோரிக்கைகளையும்..
நீ சுமக்கின்றாய்..

**************************************

நீயும் தாய் தான்..
தினம் சுமக்கிறாய்..
கடிதங்களாக..

**************************************
யார் செய்த சாபமோ..
நீ மட்டும் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறாய்..

***********************************

பாவம் நீ..
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறாய்..
வாயிருந்தும் ஊமை என்றபடியாலோ...

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10948

சந்தோசம்..

Glitter Graphics

மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10916

புதன், 9 செப்டம்பர், 2009

சந்தோசம்..



மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நவீன சங்கம்..



நிலவுப்பொழுதில்..
நீயும் நானும் மற்றும்
சுற்றத்தாரும், மற்றவரும்..

வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து
ஒரு இடமாகச் சந்தித்து
கூடிப் பொழுதைப்போக்க..

சங்கம் வளர்த்த
அந்தப்பெரிய மரம் தந்த நிழல்..
இன்று அனாதையாக அது இருக்க..

இன்று அவரவர்..
தத்தம் வீடுகளிலிருந்து..
உலகெங்கும் உறவாட வைக்கும்..
நவீன சங்கம் வளர்க்கும் கணனியாம்
.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நீயும் அழகுதான்..

Glitter Graphics

அன்றொரு பருவத்தில்

அழும் குழந்தையாய் நானிருக்க..

அன்போடு அம்மா கூறிய வார்த்தைகள்..


அதோ பார்..

இருண்ட வானில் மிளிரும்

அழகழகான நட்சத்திரங்கள்..



ஓ..

எண்ணவே முடியல்லையே..

எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்..

ஆமா..எப்படி..?

ம்....

இங்கு இறந்தவர்கள்

அங்குதான் ஜொலிக்கிறார்கள்..வெள்ளியாக..


இப்போது அமைதியாகப் பார்க்கிறேன்..

நீகூட அழகாகத்தான்....இருக்கிறாய்..

என் அம்மாவும் கூடவே அங்கேயிருப்பதால்
.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10878&st=0#entry146287

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

என்னில் நீயே..‏

Glitter Graphics

என் காதலே..என்னில் காதலா..
எத்தனை நாள் உன் நினைவுகளால்..
என் தூக்கத்தை தொலைத்திருப்பேன்..

பார்த்திருக்கும் போது நீ வராமலே போகிறாய்..
பாதி உறக்கத்தில் எனை மறக்க மெல்ல வந்து
காதல் கதை பேசுகிறாய்..

இனிமையான கனவுகூட
முற்றும் காணாத நிலையில்
உன்னால் தடங்களான
என் வருத்தங்கள் உனக்கெங்கே புரியப்போகிறது...

என் மீது நீ கொண்ட காதல்...
அதனால் நான் கொண்டேன் தொல்லை..
தூக்கம் கெட்டு நிலவு வரும் நேரமெல்லாம்
விடாமல் துரத்திக்கொண்டு வரும் உன் நினைவு..
என்னில் நீயே என்பதால்..
நச் என்று என் கையால் தந்தேன்..

தொலைந்தாய் நீயும்..கொசுவே..
தொடருகிறேன் நானும் என்..
இனிமையான தூக்கத்தை.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10257

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நன்றி‏

Glitter Graphics

கடந்த கால நினைவுகள்..
உடைந்த மனதில்
ஆலமரவேராய் ஆழப்பதிய..

முகம் தெரியாத நீயூம்..
அறிமுகமில்லாத நானும்..
நட்பெனும் அன்பால்
இணையத்தில் இணைந்து..

இன்றோடு ஆண்டுகள்
இரண்டாயிற்று..
இன்னும் நான் மறக்கவில்லை
அன்பால் நட்பால்..நீ கூறிய
அழகான அறிவுரைகளை..

நடந்து வந்த பாதையில்
காலில் குத்திய முள்ளு தானே..
தூர தூக்கி எறி..என்றாய்..

பாதையைப் பார்த்து நட
பாதியிலே வந்த துன்பம்..அது
தேடி அலைந்து போகாதே..என்றாய்..

மீதியுள்ள அழகான வாழ்வை
மீண்டும் அமைத்துவிடு
அழகிய நந்தவனமாக..என்றாய்..

ம்..
நினைத்துப்பார்க்கிறேன்..
அருகில் இருந்து கூறியது போல
அன்பான வார்த்தைகளால்..

நட்பெனும் பூந்தோட்டத்தில்
அன்பெனும் மலர்களால்
இன்னும் பல ஆண்டுகள்
பூத்திருப்போம்..


நண்பா உனக்கு
நன்றி சொல்லி நம்
நட்பைப் பிரிக்கவில்லை..
உன்னைக் கண்டு கொண்ட
நாளுக்காய் ஓர் நன்றி மட்டும்.

கேசம் வைத்த நேசம்.


தென்றல் மெல்ல வந்து
என்னைத் தீண்ட..
உன் செல்லக் கன்னமதை
நான் தழுவ..

உன் உரிமை நான்..
மறந்து நீயும் என்னைத்
தள்ளித் தள்ளி விடுகிறாயே..

தென்றலே வீச மறந்துவிடாதே..
விரல்களால் முடிகோதி பேசும்...
அவள் விதம்..
என்னை மறுபடிமறுபடியும் அவள்..
கன்னம் தொட அழைகின்றது...

முடிசூடா மன்னன் தலைமுடி நான்..
எனக்குள் பெருமை பேசிக்கொண்டு..
உன்னால் சிரிக்கிறேன்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10521

இருளை அகற்று..



முடிவில்லா தொடரை எண்ணி
வலி கொண்ட நெஞ்சோடு பதற..
உள்ளிருக்கும் வரை உலகம் கூட..
கபடம் என உள்மனம் சொல்ல..

பசி கொண்ட மானிடர் பட்டினியில் சாக..
ருசி கண்ட கயவர்கள் கழுகுகளாக மாற..
கசிகின்ற இதயங்களில் கவலைகள் படர..
வசிப்பிடமில்லாத வாழ்வில் வாழ்க்கையை தேட..

இருளைப்போக்க கிடைத்த தீக்குச்சி போல..
இருண்ட வாழ்விலும் ஒளி வீசும்..மெல்ல.
இருளில் இருந்து கொண்டு பேசுவதை விட..
வெளியில் வந்து வெளிச்சத்தில் பேசுகிறேன்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10478

என் கண்கள் தூங்காது..



நீண்ட நேரப் பயணத்தில்
நீ இங்கு வந்தபோது
நீயும் நானும் இதயங்கள்
இடமாறி இன்னல்கள் தவிர்த்து

இன்புற்று சிரித்திருந்தோம்..
நாட்கள் போவது தெரியாமல்
நாளும் பொழுதும் பறவைகள் போல்
நாளைய நாளை மறந்திருந்தோம்

வேளை வந்த போது
நீ போகும் நாளும் வந்த போது..
வேதனையில் தீயிலிட்ட
புழு போல் நானும் மனம்
வெந்து துடித்தேன்..

துடித்தது நான் மட்டுமா
ஏன் வந்தோம் ஏன் பிரிகிறோம்..
விடை தெரியாமல் நீயூம் துடித்தாய்..அழுதாய்..
ஆறுதல் கூற யாருமற்ற நிலையில்..

அழுத விழிகளோடு கையசைத்து
கண் மறைவில் நின்று
பறந்து சென்று விட்டாய்..
தூங்காத விழிகளோடு இன்றும்
உன் நினைவில் உனக்காக

என் மனம் எழுதத் துடித்த
வரிகளோடு நினைவுகளை மீட்டி
உனக்காக தூங்காத என் கண்கள் கவிபாடுகிறது.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10764

சனி, 15 ஆகஸ்ட், 2009

நேசமுடன் வாழ்த்துகள்!

zwani.com myspace graphic comments

புதிய கவிதை புனையும்
கலைஞரே நெஞ்சில்
உண்டான காயம்தான் என்ன..

நினைவு அலைகள்
தினமும் துரத்திக்கொண்டிருக்க..
ஆற்றலையும் ஆக்கத்தையும்
நெஞ்சுக்குள் புதைத்துவிடலாமா..

கைவிலங்கு போட்டு
ஆதவன் கரங்களை
அடக்கிப் பார்ப்பது பாவமில்லையா

கண்ணுக்கு அழகான கவிதைகள்
நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் வரிகள்
அத்தனையும் எழுதும் இதயம்
இன்று கவி தொடர மனம் மறுப்பதும் ஏனோ..

கவி மாலையான பின்பு
காகிதத் தோள்களுக்கு
மாலையாவதற்கு தடைவிதிப்பதும் முறைதானோ..


தொடரும் கதைக்கு முற்றும் போடாமல்
முற்றும் துறந்தமுனிவரைப் போல்
கடும் தவமாய் காலத்தை வீணடிக்கலாமா..
எதிர் பார்க்கிறேன்.. வாழ்த்துக்களோடு எழு(து)வாய்..


அன்னையைப் போல்
அறிவுரைகள் சொல்லும்..
உண்மையைச் சொல்லவா..
அது உன் கவிவரிகளல்லவா..

சென்ற பொழுதைகளின் ரணங்களை
தேடிச்சென்றே நீயும் துன்பப்படாதே
நின்றே நீயூம் சாதித்து விடு..
புதுப்புது கவிதைகளை புனைத்துவிடு.

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

மழையில் ஓர் மலர் வசம்..




மார்கழி மழைக்காலத்தில்..
கோலமயில் சாமரம் வீச..
பாவலன் அவன் வந்தான்..
மலர்ப்பாவையைத்தேடி..

கொட்டும் மழையில் நனைந்து
மொட்டுவிரித்துப் பூத்த மலர்
நாணத்தால் தலைகுனிந்து
தரையை நோக்க..

கள்ளச் சிரிப்பினில்
அவன் முத்துக் கவிதை சிதற
மனக் கோர்வைக்குள்
மாலையாக தொடுக்க..

தொடுத்த கவி மாலை
அச்சிட்டு அரங்கேறமுன்பே..
மழைத்தண்ணீரில் இதழ்கள்
உதிர..


வாழ்வது ஒரு நாள் என்றாலும்
மலர் மலர்ந்து மணம் பரப்பி மண்ணை
முத்தமிட.....
உதிர்ந்த மலர் நீ
இனி மணப்பதற்கு இடமேது..
அவசரமாய் அவனும் சென்றான்..

ஓ...

எங்கோ ஒரு இடத்தில் மழையும் மலரும்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10383

வியாழன், 16 ஏப்ரல், 2009

ஏப்பம்.



மண்ணிலிருந்து
விண்நோக்கிப் பறந்து
அங்கிருந்து குறி பார்த்து
நேராக வந்து

கொத்தித் திரியும்
கோழிக்குஞ்சை
கெளவிக்கொண்டு
போகும் கழுகு போல்..

ஏதுமறியா அப்பாவி
மழலைகள்கூட
கழுகுகள் பசிக்கு இரையாகி
காலத்தை முடிப்பது
கல்லறையில் எழுதப்படவில்லை
கண்ணீரால் மட்டும் எழுதப்படுகின்றது.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

செவ்வாய், 3 மார்ச், 2009

எல்லாம் அவன் செயல்.



நீதியும் நியாயமும்
அவன் கூண்டிலே
தர்மமும் தண்டனையும்
அவன் கையிலே...

பாவமும் பரிகாரமும்
அவன் பார்வையிலே
சட்டமும் தீர்ப்பும்
அவன் கூற்றிலே..


பாவம் செய்தவன்
தப்பிக்க முடியாது
அவன் கோட்டிலே..

பாரில் எவராலும் வெல்ல முடியாது
அவன் தீர்ப்பிலே..
அவனன்றி எதுவுமில்லை
வாழும் வாழ்விலே.

இதை அறிந்து வாழ்ந்தால்
இறைவன் வருவான்
என்றும் உன்னிடத்திலே.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வியாழன், 26 பிப்ரவரி, 2009

அடுத்த கணம் யாரறிவார்...?



வான் பொழியும்
மழை நீர்
இலையில் விழுந்து
வழிந்தோடும் அதன் நிலையில்

தவிக்கின்ற மனதுகள்
தாகம் தீர்க்க..
கொதிக்கின்ற பூமிச் சூட்டில்..
பாதங்கள் பற்றியெரிய..

பக்கத்தில் தணல்தெறிக்கும்
குண்டுகள் விழ
மண்ணில் விழுந்தான்
அவளை அன்னையாக்க
மழலையாக அவனும்...

அள்ளி அணைக்க
அவளிடமில்லை இரு கரங்கள்..
அழும் குழந்தையாக கதறியழ
அருகே ஓடும் குருதி அதன் பசியாற..

தோண்டும் குழி யாவும்
குருதி குளம் நிரம்பி வழிய
இருட்டான வாழ்வின் ஓட்டத்திற்கு துணையாக
ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கிறது..

உயிருள்ள மனிதர்களின்
கூக்குரல் ஒலிகளோடு...
உயிர் மனிதப்பிணங்களின்
அவலத்தின் ஒளியில் பாதை கடக்க...

ஓடிஓடி வாழ்வின் ஓரத்திற்கே ஓடி..
ஒளிந்து கொள்ள இடமுமின்றி..
அழிந்து கொண்டே போகின்றதே..தமிழினம்.
அடுத்த கணம் என்னாகும் என யாரறிவார்..?

ஏதும் அறியாத அப்பாவிகள்..
தினம் உடல்கள் துண்டுகளாகி
கடும் போரில் கடுமையாக வதைக்கப்பட்டு
படும் வேதனைகளுக்கு முடிவேதுமில்லையா...?

--------------------

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10181

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தீராத கொடுமை தீருமா...?




தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா



ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

வாழ்வு உன் கையில்.


எடுத்ததுக்கெல்லாம்
அதையே நம்பி நம்பி
பழக்கப்பட்டு பணத்தை
வாரி இறைத்த அவன்..
இன்று பதுங்கு குழியில்...

வசந்தம் வீசும் என்றவன்..
வாழ்வில் மாலையாகமுன்பே
மலர் கருகிப்போனதுபோல்..
கலி வந்து அவனையும்
கவலையில் ஆழ்த்தியது...

ஐயோ அம்மா என்றொரு அவலக்குரல்..

குழியில் இருந்தபடி விழி வீசினான்...
ஊருக்கெல்லாம் சாஸ்திரம் பார்த்த
நம்பிக்கையான மனிதரும் சாவின் பிடியில்..

ஓ.......இன்னுமா இருக்கிறீர்கள்..?

நம்மை வாழவிடாதவர்..
வாசல் வரை வருவார் என்று
என்றாவது உங்கள் காண்டம் சொல்லவில்லையா..?

ஊருக்கெல்லாம் ஒரு நாள்
எம காண்டம் என்று
எப்போதாவது கண்டதில்லையா...?

ராகு காலம் வந்து
ஊரே சுடு காடாகும் என்று
ஒரு நாளும் பார்த்ததில்லையா..?

எல்லாமே என் மனதோடு கேட்டுக்கொண்டு..
ஒட்டியிருந்த புழுதியோடு தட்டிக்கொள்ளுகிறேன்..
எதையும் நம்பாத அவர்களை வாழ்த்திக்கொண்டு.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10075

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அடிக்குடில் ( அடிமைக்குலம் : வேடர் இருக்கும் ஊர்: சிற்றூர்)




நாடு தந்த அடாவடியால்..
காடு வந்து ஆராரோ பாடுகிறாள்..
அடிகள்(முனிவர்) வாழ்ந்த வனத்தில்..
அமைதியாய் இவளும் அகதியாகிறாள்...

பாடித் திரிந்த காலம் எல்லாம்
பாதி வாழ்வில் கண்ணீரால் கதைசொல்லுகிறாள்..
அடிச்சியும் ( அடிமைப்பெண்) இவளாக அடிசிலுக்கு( உணவு )
அல்லும்பகலும் அலைந்து திரிந்தாலும் அடிவயிற்றுக்கு வருமையில் வாடுகிறாள்....

அடங்காத அசுரர்களால் அப்பாவிமக்களும்..
அநியாயமாக அல்லல் படும் காட்சிகள் கண்களை குளமாக்கின்றதே..
அவநெறி புரிவோர் யாராகினும் ஆண்டவன் தண்டிப்பான்..
அது வரை அலந்தலை ( கலக்கம் ) விட்டு அமைதியாய் பிரார்த்தனை செய்மகளே.

*************************
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10035
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

சனி, 24 ஜனவரி, 2009

மணம் மாறாத தமிழ்



கனடா மண்ணால் உருவாக்கப்பட்ட சாடி..
பசளை போட்ட கனடா மண்..
சுத்திகரிக்கப்பட்ட கனடா தண்ணீர்.
ஒளித் தொகுப்புக்கு ஏற்ற கனடா வளி..

இத்தனையும் கொடுத்து..
தாயகத்து கருவேப்பிலையை..
தரமாக பாதுகாத்தேன்..
மாறாத அதே மணம்..

அதுபோல் வாழ்வது கனடாவாகயிருந்தாலும்..
எம்முள் வாழ்வது தமிழ்..
அது கடல் கடந்து வந்தாலும்..
இன்னும் உலகெங்கும் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது.


வாழிய தமிழ்! வாழிய! வாழியவே!!
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9999

வெள்ளி, 16 ஜனவரி, 2009

உன் அன்பினில் நானும்



நீ தந்த அன்பினில் நான் மகிழ்ந்தேன்..
நீ செய்த குறும்பினில் என்னை நான் இழந்தேன்..
நீ வந்த பாதைதனில் நானும் நடந்தேன்..
நீ தந்த பாசத்தினில் நானும் வளர்ந்தேன்..

மாலை பொழுதினில் உன் மடியில் நானுறங்க..
சேலை தலைப்பினில் என்னுடல் தான் மறைக்க..
காலைப் பொழுதனில் உன்முகம் பார்த்திருக்க..
சாலை யோரம்தனில் உன்கரம் சேர்த்திருக்க..

அன்புடன் நீ ஊட்டிய உணவினிலே..
பண்புடன் நீ காட்டிய பரிவினிலே..
இன்பமுடன் நீ காட்டிய வழியினிலே..
அன்புடன் நாமும் வாழ்கையிலே..

விதி என்று ஒன்று எம் வாழ்விலே..
சதியோடு உறவாடி சாடி நின்றது தண்ணீரிலே..
மதிகூட தோற்றது சுனாமி உன் வரவாலே..
நின்மதி போனதே என் தாயே உன் இறப்பாலே..

இறைவா என்னையும்உன் பக்கம் அழைத்திடு..
என் தாய் முகம் பார்த்திட
அவர் அன்பினில் நானும் மகிழ்ந்திட
இறைவா என்னையும் அழைத்திடு.