ஞாயிறு, 4 மே, 2008

வெள்ளி நினைவுகள்..


புழுதி பறக்க..மணல் பரப்பில் ஓடி விளையாடி..துன்பம் இன்றி இன்பமாகமகிழ்ந்த காலங்கள்...வெய்யில் கொடுமையினால்..வேர்தொழுகி தாகம் தீர்க்க..தென்னை மர இளநீர் பருகியதெவிட்டாத இனிமையான காலங்கள்..பொழுது சாயும் நேரம்...பட்சிகள் அலையலையாய்..பறந்து சென்று தம் இருப்பிடம்..சேர்ந்து கொள்ளும் இன்பமான காட்சிகள்..ஞாயிறு வந்தாலே..நாமெல்லாம் கடற்கரை சென்று...பாட்டுக்குப்பாட்டும்...புதிர் நொடிகளும்..கேட்டுச் சொல்லி பாடித்திரிந்த காலங்கள்...நடந்து செல்லும் பாதையோரங்களில்...அறிந்தவர்கள் ஆசையோடு நலம் விசாரித்து...ஐயாவிடம் அம்மாவிடம் கேட்டதாகச் சொல்லும்...அன்பான விசாரிப்புகள்....அடப் போங்க...ஏசி வண்டியில் கூலாக சீடியில்..பாட்டுக் கேட்டுக்கொண்டு போனாலும்...சொகுசான குளியறையில் சுடுதண்ணீரில்..குளித்தாலும்...அடிடாஸ் டீ சேர்ட்டும்...நைக்கி ஷ்சூவும் போட்டு..ரேபன் சன்கிளாசும் மாட்டி..கலக்கலாக திரிந்தாலும்...கண்டால் ஹாய்..போனால் பாய் சொல்லும் திருநாட்டில்..கண்டதில்லை என் தாய் நாடு தந்தவெள்ளி நினைவலைகளை...இப்பொழுது எல்லாம்..வாய் திறவாமல் அழகாக..தமிழ் நிறையவே பேசுகிறேன்..மெளனமாக நிலாமுற்றத்தை ரசித்தபடி.

கருத்துகள் இல்லை: