புதன், 4 ஜூன், 2008

சோகங்கள் என்னோடு மட்டும்.




சோகங்கள் என்னோடு மட்டும்
ஏன் சோர்வின்றி நித்தமும்
வேறூன்றி திடமாய் இருக்கின்றது..?

நீர் இல்லா நிலத்தில்
விளையுமோ நற்பயிர்..?
நீர் ஊற்றி நான்
வளர்க்காத போதும்
கண்ணீர் ஊற்றால்..

தினம் கிளைவிட்டு
இடறின்றி துளிர்விட்டு
வளர்கின்றதே சோகம் எனும்
ஆல விருட்சம்..

போதும் போதும் சாமி
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி

அலைகடல் கரைதொடமுன்
மனம் அலைகின்றதே
இடர் பட்ட இடமெல்லாம்.
தொடர் கதை இதுதானோ..?

குறையேதும் வைத்ததுண்டோ கூறு..?
குறைவில்லா உயிர்கள் வாழ.
நிறைவாக நினைத்ததை தந்து
உன் கடன் தீர்ப்போம்.

அடுத்தடுத்தாய் கடிதங்கள்
துயர் பல சுமந்து
கண்ணிர் துடைக்கும்
துலாநீர் பாரங்கள்.

ஏங்கித் தவிக்கும்
எம்முறவுகளின் கூக்குரல்கள்.
எங்கு சென்று தஞ்சம்மென
என்னாளும் தவிக்கும்
எண்ணற்ற மக்கள்..

காலங்கள் எண்ணி எண்ணி
கன்னிகளும் கரை தேடா
மனக் கனவுகளில் மணக்கோலங்கள்

நாளைய உலகில்
நானும் பட்டதாரி என
நாளெல்லாம் கனவு கண்டு
நடுங்கி ஒடுங்கி நடுவீதியில் விசாரணையில்
நாதியற்று கிடக்கும் மாணவர்கள்

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பிதாயே..

வேலை செய்தால் வரும் 50 ரூபா
வேண்டியதெல்லாம் வேண்டாவிட்டாலும்
வேளை ஒரு வேளை உணவு உண்ண
வேண்டுமய்யா ஒரு நிரந்தர வேளை..

கையில் பொதிகளும்
பையில் பணமும்
பக்குவமாய் செயல்பட
பயணித்திடுவார் அடுத்தநகர்.

மனதில் திடமும்
கையில் பலமும்
இருப்பவன் எண்ணிட வழியில்லையே
இருப்வரை விட்டு விலத்தி வாழ..


பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.

தமிழ் என்ன முஸ்லிம் என்ன
சிங்களம் என்ன பறங்கி என்ன
சித்திரவதை பட்டு சிதறுண்டு வாழ்வது
அப்பாவி எனும் மக்கள் தானே..

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.

அண்டை நாடொன்றில்
அழகாய் நான் வாழ்கின்றேன் இருந்தும்
அவமானம் எனக்கு சொந்த
நாடென்று இதுநாள் வரை

இல்லாத போதும்..
அகதி என்ற பட்டம்
ஆயுள் வரை அடுத்தவன்
எனக்கிட்ட நாமம்.

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி சாமி.
-------------------------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

தென்றல் காற்றே.




எத்தனை சுமைகளை தான்
இத்தனை நாள் பொறுத்திருந்தேன்..
ஏன் இன்னும் என்னை வெறுக்கிறாய்..

பட்ட காயம் ஆறமுன்
மறுபடியும் ஈட்டி கொண்ட கவியால்
என்னை தாக்குவதேன்..

செய்த குற்றம் தான்
என்னவென்று எடுத்துரைத்தால்..
செய்யாது மீண்டும் செயல்படுவேன்...

திட்டங்கள் தீட்டி தீர்த்து கட்டும்
திருடி அல்ல நான்
கவி திருடியல்ல நான்..

உற்றுதான் நீயும் நோக்கினால்
உண்மை விளங்கும் உனக்குமட்டும்
உயிருள்ள என் கவிவரிகளென்று..

செத்தவன் மீண்டும் வந்ததென்று
சரித்திரத்தில்லை..
சரித்திரம் சொல்லும் செத்தவன் புகழை என்றும்..

வையகம் எங்கும் உன் காற்று
தொட்டுச்செல்லும்..
தொட்ட தென்றல் என் மூச்சாய்
நின்று எனைக்கொள்ளும்.

பட்ட துன்பம் போதுமென்று
இவள் இட்ட நாமம் தனித்தியங்கும்..
இறுதி வரை தென்றல்பெண்ணாய்
வாழப் பழகும்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6816

நாற்காலி.




அட ஏனய்யா இந்த நாற்காலிக்கு அடிபாடு..
இதை எண்ணிதான் நீ பாரு..

நாட்டு தலைவன் நீ
நாடு போற்ற வாழும் மனிதனும் நீ..

போட்ட மேடையில் எங்கிருந்தாலும்
உன் மதிப்பு ஒன்று தான்..

யாருபோட்ட சட்டம் நடு
மையமாக உனக்கிருக்கும் இருப்பிடம்...

போட்ட கதிரையும் சாதாரணமானதா..?
அரசபை அரியாசணம் உனக்கு தேவைதானா..?

சாதாரண கதிரை போட்டு விட்டால்..
சலிப்பாய் நீயும் இருப்பதென்ன..?

அவனவன் உழைப்பில் அநுபவிக்கட்டும்
ஆசையுடன் பல இருக்கைகள்..

ஏழை வீட்டில் எரியும் நெருப்பும்...
உன் வீட்டில் எரியும் நெருப்பும் ஒன்றுதான்..

இதை உணர்ந்து தான் நீயும் பாரு..
தலைவருக்கு ஒரு கதிரை, அதிலும் நட்ட நடுவில்..

சரி போகட்டும் என்றுவிட்டால்..
மாலையிலும் வேறுபாடு..

மனிதரில் வேறுபாடில்லை என்றுவிட்டு..
போடும் மாலையில் ஏனய்யா இந்த வேறு பாடு..

ஆளுயர மாலை போடுவது போல ஒரு போட்டோ..
வீதியோரங்மெங்கும் விலாசமாய் விளம்பரங்கள்..

செய்யும் நற்பண்புகளுக்கும் சேவைக்கும்..
மாலையிலும், கதிரையிலும் தேவைதானா எடுபாடு..???

பகட்டான வாழ்வும் நீயாக தேடும் புகழும்..
பாரினில் என்றும் நிலைத்ததில்லை..

பகட்டாக வாழ நீயும் நினைக்காதே..
பாசத்தை உண்மையாக வைத்துப்பழகு..

படித்தவர் படிக்காதவர் என்றதை மறந்து நீயும்..
பண்பாக நாளும் மனிதரை மதித்துப் பழகு..

நாற்காலி கூட உனக்கு ஒரு நல்வழிகூறும்..
நாமாக நாடா விட்டாலும் தாமக வந்து சேரும்.