வெள்ளி, 27 ஜூன், 2008

மனது ஒரு நவரசம்.



அலுத்துக்கொண்ட இதயம்
இன்னும் அழுதுகொண்டேயிருக்கிறது
பகட்டான வாழ்வுக்கு மனிதன் மட்டும்
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறான்...

சனிக்கிழமை என்றாலே கொண்டாட்டம்...
அதுவும் கோடைகாலத்தில் திருவிழாக்காலம்..
அதிகாலையில் வந்திடும் அயல்நாட்டிலிருந்து அழைப்பு...
ஊர்ச்செய்தி, உலகச்செய்திகளுடன் அலுத்துக்கொண்டபடி மனதும்...

அபூர்வமாக வந்திடும், பகல் மூன்று மணிக்கு
அன்னார் பூதவுடல் தகனம்.......அப்போதும் செல்லுகிறேன்..
அடுத்தாற் போல் மாலை ஆறு மணிக்கெல்லாம் மணமக்கள் வரவேற்பு...
அழுத விழிகளுக்கு மையிட்டு, அடடா நல்ல கொண்டாட்டம் கண்டு மகிழும் மனது...

இரவு நேரம் உறங்கும் நேரம் உறக்கமின்றி
பக்கம் பக்கமாக பார்த்து தட்டிச்செல்லும் போதெல்லாம்..
அடிக்கடி மாறும் முகபாவங்களும் மனதும்..
மாறிமாறி மேடை ஏறாத, வாழும் மானிட வாழ்க்கை..

ஒரே நாளில் கருப்பு உடையில்
கவலை மனதில்...
ஒரே நாளில் கலர் உடையில்
கலகலப்பான மனதில்...

அதே நாளில் கணனியில் காணும் கண்களில்
காட்சிகளின் தண்டனையாக மாறிடும் நவரச மனமே..
போதுமே வாழ்க்கையில் தந்த மாற்றங்கள்...
மறு பிறப்பிலாவது நிழல் தரும் மரமாக மாற்றிவிடு என்னை.

(இப்படத்தில் மறைவாக காண்பிக்கப்படுவது பல மனிதர்களின் முகங்களேயாகும் )
---------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி
www.nilafm.com

வியாழன், 26 ஜூன், 2008

புதன், 25 ஜூன், 2008

மெளனம் கலைவதெப்போ...?




மெல்ல விடியும் பொழுதில்..
காலைக்கதிரவன் கரங்கள் நீட்டி காத்திருக்க..

நீண்ட இரவைக்கழித்து மீண்டும்
உன்னருகே புள்ளி மான்கள் பார்த்திருக்க..

கெண்டை மீன்கள் உன் உடல்...
மெல்லத் தீண்டி சிரித்து மகிழ்ந்திருக்க..

உன் வரவு கண்டு அதிகாலையிலே..
கருவண்டுகள் சுற்றிசுற்றி சிறகடித்து பறந்திருக்க..

அள்ளிக் கொள்ளும் கரங்கள் ஆவலோடு
எதிர் பார்த்திருக்க...

நாளும் உன் மலர்வை எதிர்பார்த்து..
நாணத்தால் அகம் சிவந்திருக்க...

மெல்ல இதழ் விரித்து..
மடல் திறந்து...

உனதுள்ளம் மலர்ந்து..
தென்றலோடு மணம் கலந்து....

கபடமற்ற மலரே தாமரையே...நீ
மலர்ந்து மெளனம் கலைவதெப்போ...?
-----------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நிஜங்களின் நினைவுகள்.





கண்ணெதிரே நின்றாய்..
கதைகள் பல சொன்னாய்...
முன்னம் ஒருபோதும் காணா..
உனதுள்ளம் தந்தாய்.

அடிவானம் சிவந்தது போல்..
அமைதியாய் நானும் உன்வசமாகினேன்..
பிடிவாதமாய்க் கேட்டாய்..
பதிலும் நானும் தந்தேன்.

தாய் முகம் கண்டு..
மொழி வராத குழந்தையாய்..
மனம் முழுதும் உன்முகம் கண்டு..
மனதால் தினம் பேசி, நினைவால் வாழுகிறேன்.

யார் யாருக்கோ எல்லாம்..
கவிதைகள் எழுதி குவிக்கிறாய்.
என் மனம் வேதனையடைக்கூடாதென்று..
எங்கோ ஒரு மூலையில் என்பெயரைத் தினிக்கிறாய்.

அங்கேயும் நான் நினைப்பதெல்லாம்
உன் கவிதை கண்ணூறு படாமல் இருக்கவாவது
என் பெயர் அதில் இடம் பெறட்டும்
அதிலாவது நான் வாழந்து கொண்ட திருப்தியில்.

மார்கழி வருகிறது என்றாலே
மனம் நிறைந்த ஆனந்தம்..
எப்போதோ பதித்த கால் தடங்கள்
பார்த்து மலர் தூவி மார்கழியை வரவேற்கின்றேன்.

சிந்தையிலே தென்றலாய் வந்தாய்..
தென்றலை காற்றலையாய் தந்தாய்.
கற்றது கை மண் அளவிருக்க
பற்றுவைத்து நீயும் என்னை ஊக்கிவித்தாய்..

சிகரமாய் என்னை நீயும் போற்றி
புகழ் பாட்டாய் பல போட்டு தினம்
உன் வசமாக்கி என் நினைவுகளை
உன் நினைவுகளாக மட்டும் வாழவைத்தாய்.

காலைக் கதிரொளி பட்டு
மலர் படிந்திருக்கும் பனி விலகியது போல்
உன் வரவு கண்டு என் கண்ணீர்த்
துளி காய்ந்து கவலை போய் மகிழ்வாய் நானிருப்பேன்.

அந்த இனிமை நிறைந்த
நிஜமான நினைவுகளால் பகல்
கதிரவன் நிழலாய் தொடர்ந்து வரும்
நிஜங்களில் நினைவுகளைச்சுமக்கிறேன்.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

முகவரி இல்லாத முகங்கள்.




அன்னையவள் கைபிடித்து
அடிமேல்அடி எடுத்துவைத்து
மெல்லப்பேசும் கிள்ளை மொழியில்
செல்லக்கதைகேட்க ஆசையாய் என்னைத்
தொட்டுத்தூக்கி உச்சிமுகந்த எத்தனை உறவுகள்

விட்டுப்பிரிந்த நாட்முதல் தேடுகிறேன்
முகவரி இல்லாத முகங்களை..

கல்விபயில கல்லூரி வாசலிலே
கவலைகள் மறந்து
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
பட்டதுன்பம் எதுவுமின்றி
பகல் இரவாய் பாடித்திரிந்து கூடி குதூகளித்த..

அந்த முகவரிகள் இல்லாத
அன்பான பள்ளித்தோழிகள்..முகங்கள் எங்கே..?

ஆலயத்திருவிழாவில்
அணிஅணியாய் கன்னியர்கள் நாம்
வீசப்படாத வலையாம், வாலிப வலையில்
விழுந்து சிக்கித்தவித்து தாவணியில் வலம் வர..
தவம் கிடந்து மனம் கசிந்த..

அந்த முகவரி தெரியாத முகங்கள்
இன்று எங்கெங்கோ எல்லாம் தேடுகிறேன்..

காலத்தின் வேதனைகளைச்சுமந்து..
கடல் கடந்து வேறு இடமாய்
கரை ஒதுங்கி
கண்கள் சந்தித்தவர்களெல்லாம்
நலம் கூறி விடைபெற்ற

அந்த நல்ல மனம் படைத்த
முகவரி இல்லாத முகங்களை தேடுகிறேன்.

இல்லத்தில் இருந்து இணையத்தில் வந்து
இதயத்தில் இடம் பிடித்து..
இன்னல்கள் வரும் போது
இறைவன் துணையாய் அருள் வாக்குத்தந்த

இந்த அன்பான உறவுகள் எம் முற்றத்து
முகவரி இல்லாத முகங்கள்.

இதுநாள் வரை
இப்படி நான் சிந்தித்ததில்லை...
இதை எழுத வைத்த உன்னை நான்
சந்தித்ததில்லை...இனிமேல் நானும்
மறந்துவிடப்போவதுமில்லை என்
எண்ணத்தில் நீயன்றி வேறெதுவுமில்லை...

நீயும் எனக்கு
முகவரி தெரியாத முகங்கள்.
( நிலாமுற்றம்)






--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

அதிகாலை மலர் அது.





அதிகாலை துயிலெழுந்து..
ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..
விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..

படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..
பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..
பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..

புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..
புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்து
பக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....

ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..
ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..
அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..

நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..
திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..
வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..

அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..
வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..
எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..

எதிரில் நானும் அதை ரசித்தபடி..
எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..சோர்ந்துபோகாது..
என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...

இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..
சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..
ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...

மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..
இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..
இனிய அந்த நாட்கள் இனிவருமா...? அதுமட்டுமா...

அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..
அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..
அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...

அன்றைய காலைப்பொழுதில், அதிகாலை மலராக நானும்
அனைவரோடும் அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று
அதிகாலை மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..

பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..
பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..
பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன். மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.

பட்டபாடும், அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..
யாருக்கும் புரியாது..அந்த மன நிலை.
யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

திங்கள், 9 ஜூன், 2008

காத்திருப்பு.




அன்னை மடியில் பிறந்து
மண்ணின் போர்வையில் முகம்
புதைத்து கண்ணீர் வற்றி
இன்னும் ஏதும் கிடைக்குமா நான் வாழ
என்றோ நீயும் தரையை உற்றுப்பார்க்க...

எங்கிருந்தோ வந்த பருந்து
விருந்து ஒன்று விரைவில்
கிடைத்ததை எண்ணி
வருந்தும் நிலையறிந்தும்...

கிடைத்த விருந்தை
அடைய நினைக்கின்றதோ...
அன்றி..
மனிதனாய்ப்பிறந்து
மனித நேயங்கள் மறைந்து..

வறுமையிலும் கொடுமையான
பட்டினி எனும் நோய் வாட்டி
கிள்ளிப்பார்க்ககூட
எள்ளலவும் சதையின்றி..

எடுப்பார் யாருமின்றி
பிழைப்பார் எவருமின்றி
இதயம் மட்டும் துடிக்க
இப்படியும் உணவு உண்டு
பிழைக்க வேண்டுமா என நினைக்கின்றதோ...?

அல்லது..

தீனி கிடைக்காமல் பட்டினியால்
நான் இறக்கும் போதும்
இருக்கும் சதையை உனக்கு
தீனியாய் தருகிறேன் எடுத்துக்கொள்

என மனிதன் மன்றாட்டமாய்
தலைகுனிந்து கேட்கிறானோ..?

எலும்பு மனிதன் எழும்ப நினைக்கிறான்..
எதிரில் பருந்து உணவை நினைக்கிறது..
யார் யாருக்கோ காத்திருப்பு
யாருக்குத்தான் அதில் நல்ல தீர்ப்பு.
--------------------------------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

புதன், 4 ஜூன், 2008

சோகங்கள் என்னோடு மட்டும்.




சோகங்கள் என்னோடு மட்டும்
ஏன் சோர்வின்றி நித்தமும்
வேறூன்றி திடமாய் இருக்கின்றது..?

நீர் இல்லா நிலத்தில்
விளையுமோ நற்பயிர்..?
நீர் ஊற்றி நான்
வளர்க்காத போதும்
கண்ணீர் ஊற்றால்..

தினம் கிளைவிட்டு
இடறின்றி துளிர்விட்டு
வளர்கின்றதே சோகம் எனும்
ஆல விருட்சம்..

போதும் போதும் சாமி
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி

அலைகடல் கரைதொடமுன்
மனம் அலைகின்றதே
இடர் பட்ட இடமெல்லாம்.
தொடர் கதை இதுதானோ..?

குறையேதும் வைத்ததுண்டோ கூறு..?
குறைவில்லா உயிர்கள் வாழ.
நிறைவாக நினைத்ததை தந்து
உன் கடன் தீர்ப்போம்.

அடுத்தடுத்தாய் கடிதங்கள்
துயர் பல சுமந்து
கண்ணிர் துடைக்கும்
துலாநீர் பாரங்கள்.

ஏங்கித் தவிக்கும்
எம்முறவுகளின் கூக்குரல்கள்.
எங்கு சென்று தஞ்சம்மென
என்னாளும் தவிக்கும்
எண்ணற்ற மக்கள்..

காலங்கள் எண்ணி எண்ணி
கன்னிகளும் கரை தேடா
மனக் கனவுகளில் மணக்கோலங்கள்

நாளைய உலகில்
நானும் பட்டதாரி என
நாளெல்லாம் கனவு கண்டு
நடுங்கி ஒடுங்கி நடுவீதியில் விசாரணையில்
நாதியற்று கிடக்கும் மாணவர்கள்

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பிதாயே..

வேலை செய்தால் வரும் 50 ரூபா
வேண்டியதெல்லாம் வேண்டாவிட்டாலும்
வேளை ஒரு வேளை உணவு உண்ண
வேண்டுமய்யா ஒரு நிரந்தர வேளை..

கையில் பொதிகளும்
பையில் பணமும்
பக்குவமாய் செயல்பட
பயணித்திடுவார் அடுத்தநகர்.

மனதில் திடமும்
கையில் பலமும்
இருப்பவன் எண்ணிட வழியில்லையே
இருப்வரை விட்டு விலத்தி வாழ..


பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.

தமிழ் என்ன முஸ்லிம் என்ன
சிங்களம் என்ன பறங்கி என்ன
சித்திரவதை பட்டு சிதறுண்டு வாழ்வது
அப்பாவி எனும் மக்கள் தானே..

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.

அண்டை நாடொன்றில்
அழகாய் நான் வாழ்கின்றேன் இருந்தும்
அவமானம் எனக்கு சொந்த
நாடென்று இதுநாள் வரை

இல்லாத போதும்..
அகதி என்ற பட்டம்
ஆயுள் வரை அடுத்தவன்
எனக்கிட்ட நாமம்.

பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி சாமி.
-------------------------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

தென்றல் காற்றே.




எத்தனை சுமைகளை தான்
இத்தனை நாள் பொறுத்திருந்தேன்..
ஏன் இன்னும் என்னை வெறுக்கிறாய்..

பட்ட காயம் ஆறமுன்
மறுபடியும் ஈட்டி கொண்ட கவியால்
என்னை தாக்குவதேன்..

செய்த குற்றம் தான்
என்னவென்று எடுத்துரைத்தால்..
செய்யாது மீண்டும் செயல்படுவேன்...

திட்டங்கள் தீட்டி தீர்த்து கட்டும்
திருடி அல்ல நான்
கவி திருடியல்ல நான்..

உற்றுதான் நீயும் நோக்கினால்
உண்மை விளங்கும் உனக்குமட்டும்
உயிருள்ள என் கவிவரிகளென்று..

செத்தவன் மீண்டும் வந்ததென்று
சரித்திரத்தில்லை..
சரித்திரம் சொல்லும் செத்தவன் புகழை என்றும்..

வையகம் எங்கும் உன் காற்று
தொட்டுச்செல்லும்..
தொட்ட தென்றல் என் மூச்சாய்
நின்று எனைக்கொள்ளும்.

பட்ட துன்பம் போதுமென்று
இவள் இட்ட நாமம் தனித்தியங்கும்..
இறுதி வரை தென்றல்பெண்ணாய்
வாழப் பழகும்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6816

நாற்காலி.




அட ஏனய்யா இந்த நாற்காலிக்கு அடிபாடு..
இதை எண்ணிதான் நீ பாரு..

நாட்டு தலைவன் நீ
நாடு போற்ற வாழும் மனிதனும் நீ..

போட்ட மேடையில் எங்கிருந்தாலும்
உன் மதிப்பு ஒன்று தான்..

யாருபோட்ட சட்டம் நடு
மையமாக உனக்கிருக்கும் இருப்பிடம்...

போட்ட கதிரையும் சாதாரணமானதா..?
அரசபை அரியாசணம் உனக்கு தேவைதானா..?

சாதாரண கதிரை போட்டு விட்டால்..
சலிப்பாய் நீயும் இருப்பதென்ன..?

அவனவன் உழைப்பில் அநுபவிக்கட்டும்
ஆசையுடன் பல இருக்கைகள்..

ஏழை வீட்டில் எரியும் நெருப்பும்...
உன் வீட்டில் எரியும் நெருப்பும் ஒன்றுதான்..

இதை உணர்ந்து தான் நீயும் பாரு..
தலைவருக்கு ஒரு கதிரை, அதிலும் நட்ட நடுவில்..

சரி போகட்டும் என்றுவிட்டால்..
மாலையிலும் வேறுபாடு..

மனிதரில் வேறுபாடில்லை என்றுவிட்டு..
போடும் மாலையில் ஏனய்யா இந்த வேறு பாடு..

ஆளுயர மாலை போடுவது போல ஒரு போட்டோ..
வீதியோரங்மெங்கும் விலாசமாய் விளம்பரங்கள்..

செய்யும் நற்பண்புகளுக்கும் சேவைக்கும்..
மாலையிலும், கதிரையிலும் தேவைதானா எடுபாடு..???

பகட்டான வாழ்வும் நீயாக தேடும் புகழும்..
பாரினில் என்றும் நிலைத்ததில்லை..

பகட்டாக வாழ நீயும் நினைக்காதே..
பாசத்தை உண்மையாக வைத்துப்பழகு..

படித்தவர் படிக்காதவர் என்றதை மறந்து நீயும்..
பண்பாக நாளும் மனிதரை மதித்துப் பழகு..

நாற்காலி கூட உனக்கு ஒரு நல்வழிகூறும்..
நாமாக நாடா விட்டாலும் தாமக வந்து சேரும்.