வெள்ளி, 9 ஜனவரி, 2009

உங்களுக்குப் புரிகின்றதா..?



ஆலயத்திற்குச் செல்லும் போது...
அஸ்லாமு அழைக்கும் என்று..
எதிர் கொள்ளும் நண்பனைப்பார்த்தேன்..
அழைக்கும் சலாம் வணக்கம் என்றான்..

அப்போது மணி பன்னிரண்டு...
பள்ளி வாசலில் இருந்து வந்த..
எனக்குப்புரியாத புனித வார்த்தைகளைக்கேட்டு...
இரு காதுகளிலும் தொட்டு ஏதோ நினைத்துக்கொண்டான்..

ம்...

ஆலய மணியோசை கேட்டால்..
நாமும் குட்டிக்கும்பிடுவது போல்..
புரியாத மொழியில் வரும்
வார்தைகளின் அர்த்தம் புரிகிறதா எனக்கேட்டேன்..

கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது
ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை என்றான்..
நல்லது....நமக்கும் நேரமாகிறது விடைபெற்றேன்..
அழகான பூக்களைப் பிய்த்து மந்திரம் சொல்லி எறிகிறார்..


எந்தச் சொல்லுக்கும் அர்த்தம் எனக்குப் புரியவில்லை..
என் மனம் சொல்லும் வேண்டுதல்களை சுவாமியின்..
கா(க)ல் அடியில் இறக்கிவைக்கிறேன்..
உங்களுக்குப் புரிகின்றதா எனக் கேட்டுக்கொண்டு.

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9873