சனி, 21 நவம்பர், 2009

கவிதை பாடும் அவள் இதழ்




இதழ்கள் விரிப்பழகில்..
உன் இதழ்களின்
சிரிப்பைக் கண்டேன்..

********************************

இதழ்கள் விரித்து..
இந்த ரோஜா
இதயம் மலர்ந்து..

முகம் சிவந்தது..
நாணத்தாலா..
நான் வந்ததாலா..


*********************************
யாரோ சொல்லிக்கொண்டு
போகிறான்..
அவள் இதழ்களைக் காணவில்லை என்று..
பையித்தியக்காரனவன்..
இதழ்களை காணத் தவறிவிட்டான்..

**********************************

கரு வண்டுகளும்..
உன்னைக் காதலிக்கின்றவோ..
வைத்த கண்வாங்காமல் பார்க்கின்றதே...

**********************************

இதழில் தேன் குடிக்க..
இமைகளில் கரு வண்டுகள்..
வட்டமிட்டு கவி பாடுகிறதோ..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11536

உன்னில் காதல்..


மனதோடு பேசிப் பேசி..
வார்த்தைகளை உதிராமல்..
பேசிய வார்த்தைகளை பகிர்ந்து..

நித்தமும் அச்சடிக்க..
உன்னை மட்டும் காலிக்கிறேன்
உனக்கும் சொல்லாமலே..

நிலவுத் தாய்..




வருவாய் தருவாய்..
அருள்வாய் எனதுயிரே..
துயர் கொண்ட எனதுள்ளம்..
துடைத்திட விரைந்தோடி வருவாய்..

தினம் உன்னையே அழைத்தேன்..
மனம் தினம் பலமுறை தொழுதேன்..
மனம் கனத்து தினம் அழுதேன்..
சினம் கொண்டு நான், நீயின்றி துடித்தேன்..

தூறல் மழையில் நான் நனைந்தாலும்..
துடித்துப்போய் சேலைத்தலைப்பால் தலைதுடைத்திடுவாய்..
கார் இருளில் கைபிடித்து கண்சிமிட்டும் நட்சத்திரமாய்..
பார் முழுதும் பவணி வரும் நிலவும் நீதான் என் அம்மா.

உள்ளம் முழுதும் உந்தன் எண்ணம்..
கள்ளம் ஏதும் இல்லாத கொள்ளையின்பம் கண்டேன்..
வெள்ளம் போல் கொண்ட பாசம் தரவா..
தர வா..எனதுயிர் தாயே என்னோடு வா..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி