வெள்ளி, 2 ஜனவரி, 2009

ஓராண்டு நிறைவு



முடிவடைந்த 2008
தந்துவிட்ட சோகம்..
வந்து விட்ட 2009 ல்
ஓராண்டு நிறைவு பெற்றது..


இவ்வாண்டை வரவேற்க..
இப்புவியில் என்னை வரவேற்ற..
இவ்வுலகை விட்டுச்சென்ற..
இதயம் முழுதும் நிறைந்த பிதாவின்


இனிமையான ஆண்டுபிறக்கும் போது..
அருமையான நற்குணங்கள் கூறுவார்..
அமைதியாகப் பேசக்கற்றுக்கொள்..
அதிகம் சிந்தித்துச் செயலாற்றிக்கொள்..

வரும் துன்பத்தை மனதார ஏற்றுக்கொள்..
தரும் சந்தோசத்தையும் அளவோடு மகிழ்ந்துகொள்..
பாடசாலைப்படிப்பை நிறுத்திக் கொண்டாலும்..
வாழ்க்கைப் பாடத்தை பாடமாக கற்றுக்கொள்..

பெற்றோரைப்போல் சகலரையும் மதிக்கக் கற்றுக்கொள்..
பெரும் பதவியில் இருந்தாலும் குணத்தால் மட்டும் உயர்ந்து கொள்..
பல உதவிகள் செய்தாலும் ஆயிரம் முட்டை போட்டு
அமைதியாகயிருக்கும் ஆமைபோல் அமைதியிருந்துகொள்...

ஒரு முட்டை போட்டுவிட்டு கொக்கரித்துக்கொண்டு..
பெருமையடிக்கும் சில மனிதர்களிடத்தில் அவதானமாகயிருந்துகொள்....
இருந்தாலும், இறந்தாலும் மரம் தரும் சுகம் போல்..
இருக்கும் போதே நல்லதையே நினைத்து நல்லதையே நினைத்துக்கொள்...


தோல்விக்கான காரணத்தை எண்ணி துவண்டுவிடாதே..
வெற்றியின் பாதைக்கான வழி தேடி துணிந்து கொள்..
அழும் துயரம் வரும்பேதெல்லாம்...
தொழுது மனப்பாரம் இறக்கிவைத்துக்கொள்.
ஆண்டவனேயன்றி அதைவிட ஆறுதல் வேறுயாருமில்லை.


அனைவருக்கும் என் ஐயாவின் வார்த்தைகள் பிரையோசனப்படட்டும்.
( என்னுடைய சொந்தக்கருத்துக்களும் சேர்த்துள்ளேன்..)
அவர் சார்பில் 2009 ஐ இனிதே வரவேற்போம்.

************************************************

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com