வெள்ளி, 16 ஜனவரி, 2009

உன் அன்பினில் நானும்



நீ தந்த அன்பினில் நான் மகிழ்ந்தேன்..
நீ செய்த குறும்பினில் என்னை நான் இழந்தேன்..
நீ வந்த பாதைதனில் நானும் நடந்தேன்..
நீ தந்த பாசத்தினில் நானும் வளர்ந்தேன்..

மாலை பொழுதினில் உன் மடியில் நானுறங்க..
சேலை தலைப்பினில் என்னுடல் தான் மறைக்க..
காலைப் பொழுதனில் உன்முகம் பார்த்திருக்க..
சாலை யோரம்தனில் உன்கரம் சேர்த்திருக்க..

அன்புடன் நீ ஊட்டிய உணவினிலே..
பண்புடன் நீ காட்டிய பரிவினிலே..
இன்பமுடன் நீ காட்டிய வழியினிலே..
அன்புடன் நாமும் வாழ்கையிலே..

விதி என்று ஒன்று எம் வாழ்விலே..
சதியோடு உறவாடி சாடி நின்றது தண்ணீரிலே..
மதிகூட தோற்றது சுனாமி உன் வரவாலே..
நின்மதி போனதே என் தாயே உன் இறப்பாலே..

இறைவா என்னையும்உன் பக்கம் அழைத்திடு..
என் தாய் முகம் பார்த்திட
அவர் அன்பினில் நானும் மகிழ்ந்திட
இறைவா என்னையும் அழைத்திடு.