திங்கள், 28 செப்டம்பர், 2009

வாழ்வு உன் கையில்.


மரம் நிலைக்க
அதன் வேர் காரணம்..
அதுவே நீடுழி வாழ..
நல்ல வளமான மண் காரணம்..

நீ வாழ..
பெற்றோர்கள் காரணம்..
உன் வாழ்வு செழுமை பெற..
உன் மனம் தான் காரணம்..

நல்லதையே நினை..
நன்மையே செய்..
உள்ளத்தால் உண்மையாய் நட..

உயிருள்ளவரை நல்ல மனம் உனக்கிருந்தால்..
உலகில் அதைவிட பெருமதியானது எதுவுமில்லை..
உன் வாழ்வு உன் கையில்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11002

வழி(லி)


முட்டி முட்டி தலைமுழுக்க வலி..
வழி தேடி தவிக்கும்..
தொட்டி மீன்கள்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10989

வேண்டுதல்..


எந்தச் சாமிக்கு வேண்டுதலோ..
இலைகளை மட்டும் உதிர்கின்றனவே
மரங்கள்..(AUTUMN)

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

வெளிச்சம்..



எந்தச் சந்தர்ப்பத்திலும்..
ஏழைக்கென்ன கவலை
இலவசமாய் நிலா வெளிச்சம்..

____________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

ஐயோ பாவம்..


ஏழையின் சிரிப்பில்..
இத்தனை அடிகளா..
காந்தியின் முத்திரை..

_______________________
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி