புதன், 2 ஏப்ரல், 2008

திருமணம்.



மனம் இரண்டு, இணைந்தால் திருமணம்

மனம் வறண்டு வாழ்ந்தால் ஒரு மனம்

குணம் கொண்ட வாழ்வது சில மனம்

பணம் கொண்ட வாழ்கையில் பல மனம்,


தினம் வாழ்வதில் போராட்டம்

பணம் குவிப்பதில் தேரோட்டம்

சினம் கொண்ட வாழ்கையில் திண்டாட்டம்

மனம் கூடுகின்ற வாழ்கையில் கொண்டாட்டம்


இருமனம் திரு மணமாகி

திருமணம் ஒரு மனமாகி

விரு வென்று நாட்கள் தாவி

கரு என்ற கர்ப்பம் நிரப்பி


பல பேர் வாழ்வது தேன் அமுதம்

சில பேர் வாழ்வது வீண் பாரதம்

பல பேர் வாழ்வது கண்ணீர் நீரோட்டம்

சில பேர் வாழ்வது பன்னீர் குளிரோட்டம்


வாழ்கையிது நாம் வாழத்தான்

வாழும் வரை நாம் போராடத்தான்

காலமும் ஒரு நாள் கைகூடும்

காத்திருக்கும் நாளும் ஒரு நாள் திரு நாளாகும்..

--------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: