வெள்ளி, 25 ஏப்ரல், 2008

தேடும் கண்பார்வை..

எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள்...
அத்தனை கண்களும் மாறிமாறிப்போகும் பூப்பந்தின் மீது...
அவரவர் மனதினில் போராட்டம்..
எந்த அணி வெல்லும் என்பதில் சந்தேகம்...

என் பூவிழியும் பந்துபோல் மாறிமாறி உருள்கிறது..
நீ வரும் வழிநோக்கி...
என்னதான் வெற்றி ஒருஅணிக்கு கிடைத்தாலும்...
நீ வராததால் தோல்விகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு....
உள்ளத்தில் வேதனையும் உதட்டில்வெறும் புன்னகை

மட்டும்...விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தேன்..
விதி என் வாழ்க்கையை விளையாட்டாக்கிவிட்டதே..
தோல்வியும் வெற்றியும் விளையாட்டுக்கு மட்டுமல்ல...
வாழ்க்கைக்கும் சேர்த்துதான்...வெறும் சமாதானத்தோடு களம் இறங்கிசெல்லுகிறேன் நான்.
.............................
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வாழும் மனிதா..

ஓ..மனிதா
வாழ்க்கைப் படகினில்

நீயும் வாழ
கடலைப்போல் நல்ல..

பரந்த உள்ளம் தேவை..

அடுத்தவரை நம்பி வாழாதே
உள்ளத்தில் தூய்மையும்

உண்மையான உழைப்பும்
உன்னிடத்தில் உயர்திருந்தால்

கடல் வற்றியும் _அலையோடு
போகாத படகிற்கு_ கயிறு
துணை நின்றது போல்
நாளைய வாழ்வில்


துன்பம் வந்து வாட்டினாலும்
உன் உள்ளமெனும் கோவிலில்
கவலைகளின்றி

நம்பிக்கை எனும் நூல்
வழிகாட்டியாகஅமையும்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி