ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அடிக்குடில் ( அடிமைக்குலம் : வேடர் இருக்கும் ஊர்: சிற்றூர்)




நாடு தந்த அடாவடியால்..
காடு வந்து ஆராரோ பாடுகிறாள்..
அடிகள்(முனிவர்) வாழ்ந்த வனத்தில்..
அமைதியாய் இவளும் அகதியாகிறாள்...

பாடித் திரிந்த காலம் எல்லாம்
பாதி வாழ்வில் கண்ணீரால் கதைசொல்லுகிறாள்..
அடிச்சியும் ( அடிமைப்பெண்) இவளாக அடிசிலுக்கு( உணவு )
அல்லும்பகலும் அலைந்து திரிந்தாலும் அடிவயிற்றுக்கு வருமையில் வாடுகிறாள்....

அடங்காத அசுரர்களால் அப்பாவிமக்களும்..
அநியாயமாக அல்லல் படும் காட்சிகள் கண்களை குளமாக்கின்றதே..
அவநெறி புரிவோர் யாராகினும் ஆண்டவன் தண்டிப்பான்..
அது வரை அலந்தலை ( கலக்கம் ) விட்டு அமைதியாய் பிரார்த்தனை செய்மகளே.

*************************
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10035
கொடுத்து வாழ்....
கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி