skip to main |
skip to sidebar
இரு விழி படபடக்க..
இமையிரண்டும் சிறகடிக்க..
இருதயம் லப்டப்லப்டப் தாளமிட
இனி என்ன எழுத என இருகரங்கள் தடுமாற...
இனியவனே...
இது என்ன வேடிக்கை விளையாட்டு..!!
இனி ஒரு காலம் வருமாகில்..
இங்கிதம் தெரிந்து செயல்பட மாட்டேனா..?
இயம்பு நீயும்..
இணங்கல் தெரிந்து செயல்பட மறுப்பேனா....?
இலச்சை எனக்கிது உண்டென்று நீ உணர்ந்திட்டாலும்..
இவள் உன்பேர் வசித்திட்டாள் என்பதை காண்பாயா..?
இலையுதிர் காலங்கள் மரங்களுக்கு வரலாம்...
இவள் உன் நினைவில் வரலாமோ...?
இறக்கை ஒன்றிரண்டு இருந்திட்டால்...
இன்நேரம் இதை எழுதி கழித்திடுவாளா...?
இரு சிறகுகளும்..மின்சாரக் கம்பியில்..
இறுக்கிப் பிடித்திடும்..
இன்னல் நிலை நீ கண்டிட்டு..
இனிமையாக ரசித்தாய் நீ சிரிதாய்..இன்பமான என் தவிப்பை..இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு. இயம்பு ( இயம்புதல் ) - இனிமையாகக் கூறுதல் இணங்கல் - உடன்பாடு; பொருந்துதல் இலச்சை - நாணம்; வெட்கம்
வெட்ட வெட்டத் தலைக்கும்..
வாழை மரம் போல...
நீ வெறுக்க வெறுக்க..
உன் மேல் என் அன்பு ...
வளர்கின்றதே....
மண் கேட்டு மழை வருவதில்லை...
நீ கேட்டு நான்
பாசம் வைப்பதில்லை...
தொட்டுச் செல்லும் காற்றைப்போல...
உன்னைத் தொட்டுச் செல்லுகின்றது என் நினைவு...
பட்டுத் தெறிக்கும் ஆதவனைப்போல்.....
என் நினைவு உன்னில் மட்டுமே...
பட்டுத் தெறிக்கின்றது.....
சித்திரை மாத வெய்யிலைப்போல்..
என்னை சுட்டெரிக்க வேண்டாமே..
மார்கழி மாத பனி போல்..
குளிர் காலத்து நிலவு போல்...
உயிரோடு உலாவரும் உறவு போல்.....
அந்தியில் மணக்கும் மல்லிகையாய் நானிருப்பேன்.
ஆயிரம் கரங்கள் கொண்டு
அலைகடலைத் தடுத்தாலும்...
அலைகள் ஓயப்போவதில்லை..
ஆயிரம் உறவுகள்
அன்போடு பழகினாலும்..
உன் நினைவெனும் அலைகள்
என்னுள் ஓயப்போவதில்லை..
பூக்களைப் பார்த்து
புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்..
ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும்..
அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே...
நதிகளைப் பார்த்து..
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்..
போய்ச் சேருமிடம் தெரியாமல்..
ஓடிக்கொண்டே கடலில் சங்கமிக்கின்றதே..
எத்தனையோ ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்..
சின்ன வயசில நீயூம் நானும்..
ஓடித்திரிந்த நாட்கள்..
பேசித்திரிந்த காலங்கள்..
கூடியாடி கழித்த நினைவுகள்..
என்றும் மறையாது...
என்றதை நீயும் அறிவாயா..?
ஆடைகள் நூறு வகை...
அதை ஆளும் வகை - அது
ஆளாளுக்கு சிறந்த கதை..
மேடை தனில் ஒரு வகை...
மேலோர் கீழோர் தாங்கி
வரும் வேறொரு நிலை..
மங்களத்திற்கு ஒரு வகை..
மயான அமைதிக்கு ஒரு வகை..
கட்சிக்கு ஒரு வகை....அது
காட்டும் பொருளில் இருள் ஒளி வேறு நிலை..
பாவலருக்கு ஒரு நிலை..
பள்ளிச் சிறுவர்களுக்கு வேறொரு நிலை..
நாடு விட்டு நாடு போனால்..
நாமும் தேடும் அந்த உடை..
கூடு விட்டு ஆவி போனால்..
கூடி நிற்போர் காட்டும்....கருப்பு வெள்ளை..
அது தரும் மன நிலை..
போதி மரத்து புத்தரும்..
போதனை தரும் வள்ளரும்..
போர்த்திருக்கும் காவி தனை..
ஆடவரும் மங்கையரும்....
ஆடையதுவே என்றே தேந்தெடுத்தயாடையது.....
பாலுக்கு ஒரு ஆடை...
பாலகனுக்கும் ஒரு ஆடை...
நீதிக்கு ஒரு ஆடை...
நீதி தேவனுக்கு ஒரு ஆடை...
காவலுக்கு ஒரு ஆடை..
தாதிக்கு ஒரு ஆடை..
வைத்தியனுக்கு ஒரு ஆடை..
வையகத்திற்கு ஒரு ஆடை..
எத்தனை ஆடை வந்திடினும்..
அத்தனையும் அதன் வெளித் தோற்றமே..
வெள்ளாடையெனும்...
கலங்கமில்லா உள்ளாடை நீ நெஞ்சத்தில்
கொண்டிருந்தால்..
அழுக்குள்ள ஆடையிலும்..
தூய்மை அங்கே வெளுத்து நிற்கும்.
அதுவே நீ கொண்டிருக்கும்
சிறந்த ஆடையென்பேன்.
வெளித்தோற்றத்தைக் கண்டு நம்பி விடாதே..
வெள்ளையுள்ளம் எங்கே என தேடிச்சென்று...
உள்ளே அகம் கண்டு கொள்வாய் நன்றே.