புதன், 2 ஜூலை, 2008

மெல்லத் துளிர்த்தாய்..


நித்தம் நித்தம் நானும் பார்க்கிறேன்
சத்தம் ஏதும் இல்லாமல் நீயும் பார்க்கிறாய்
உனக்கும் எனக்கும் அப்படி என்னதான் யுத்தம்

எப்படியோ வந்துவிட்டாய்.
மலர ஏன் தாமதம்
மனதுக்குள் என்ன விரகதாபம்

இன்று மலர்வாய் நாளை மலர்வாய்
என்று நினைத்து எனக்குள் ஏமாற்றம்
என்று மலர்வாய் நானறியேன்
இன்றே மலராயோ நறுமணம் தாராயோ

புதிய பூவாய் எங்கும் மணம் பரப்ப
உன் வரவு எதிர் பார்த்து என் மனம்
தினம் தினம் அதில் நாடும்

மெல்ல மெல்லத்துளிர்த்தாய்
அள்ள அள்ள கொள்ளை ஆசை
அழகான பூக்களே பூப்பது எப்போது..

நீ வெய்யிலில் வாடினால்
மழையாய் நான் வருவேன்
மலராய் நீயும் வந்தால் என்கூந்தல் உனக்காய் காத்திருக்கும்.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

www.nilafm.com

கருத்துகள் இல்லை: