வெள்ளி, 23 அக்டோபர், 2009

வஞ்சக வலையில்..


மனிதன் செய்த
வஞ்சக மின்சார வலையில்..
சிக்குண்டு

அநியாயமாக
தம் உயிர்களை
மாய்த்துக் கொண்ட..

ஏதும் அறியாத
அப்பிராணி உயிர்கள்...

அவனுக்கென்ன..

மரம் இருந்தாலும்
நிழல்..
இறந்தாலும்
விறகு..

அதுபோல்..
செத்தது மாடுகள் தானே..

அதன் பாலைக்குடித்தான்..
இனி தோல எடுத்து
மேளம் அமைத்து

அடிச்சுப் பார்த்து ஆட்டம் போடுவான்..
அவன் ஆட்டம் அடங்கும் போது..
இந்த மாட்டுத் தோல் அவனுக்காக
அப்பவும் இசையாகப் பேசும்..

(படத்தைப் பார்த்தவுடன் மனசு கலங்கிறது. அதனால் கிறுக்கியது இது)
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11329

நீ..


நான் என்னை
மறந்து நினைக்கும் போதெல்லாம்..
நீ மட்டும் தெய்வமாகிறாய்..

காரணம் கேட்டு..
மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்..
அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்..

தீபாவளி இனிப்புப் பண்டங்களை
ருசித்து சாப்பிடும் போதும்..
இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்..

கோவிலுக்குச் சென்று..
அமுது உண்ணும் போதும்..
நீ தந்த அமுது தான் ஞாபகம்..

இனிப் போதும்..போதும்..
உறங்கவும் முடியவில்லை..
உண்ணவும் முடியவில்லை..

எண்ணங்கள் யாவும்..
மரத்தின் கிளை, இலை போலவும்..
வானின் நட்சத்திரங்கள் போலவும்..

நீயே தான்.....
என்னுள் சங்கமித்துள்ளாய்..
உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை...

நீ எனக்கு கற்பித்த..
வளர்த்த தமிழ்..
உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்..
என்னுள் உறைந்து கிடக்கின்றது..

கோபுர கலசம் போல்..
என் வாழ்வின் சுடர் ஒளி நீ..
உள்ளங்கை ரேகை போல்..
உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ..

என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ
மெய்யுள் கலந்த பந்தம் நீ..
என்றும் என் சொந்தம்..நீ..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11216

படத்தில்..


வீடெல்லாம் ஒப்பாரி..
பாட்டி இறந்து விட்டார்....
அப்பா மட்டும் புன்னகை படத்தில்..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11190

விதவை



தான் விதவை என்று தெரிந்தும்..
அம்மா பொட்டு வைத்து பூ வைக்கிறாள்..
என் அக்காவிற்கு....

நிஜம்


நானும் அண்ணாவும்
சண்டைபோடுகின்றோம்..
அப்பா சிரித்துக்கொண்டிருக்கிறார் புகைப்படத்தில்..

உயிர் காதலர்கள்...

Etnies

Click Here For Images &
Etnies Pictures

இணை பிரியாத
உயிர் காதலர்கள்...
ஒரு ஜோடி பாதணிகள்..

நற் செய்தி



நற் செய்தியாம்..
அகதிகளுக்கு தீபாவளி புத்தாடைகள்...
உடை மாற்ற மறைவிடம் இல்லாத போது..

ஆன்மாவின் சிந்தனையில்..



ஆன்மா பாடிய
இனிய சங்கீதம்..
என் தாயின் தலாட்டு..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11179

அவலம்..


ஆயுதங்கள் பேசியதால்..
(தலை)எழுத்துக்கள் கால்களை இழந்தன
வ த பே (வா,தா,போ)

********************************

இலங்கைத் தமிழர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
பத்திரிகைகளில் மட்டும்..

********************************

ஓ...நீல வானம்
தரையில் பாய்விரித்திருக்கின்றதே..
அகதிகளின் கூடாரங்கள்..

*********************************

வாழ்ந்து பாரு...



ஓடும் வரை ஓடு..
ஒருவரையும் துன்புறுத்தாது ஓடு..
தேடும் வரை தேடு..
தேடிய யாவும்
நேர்மைதானா என்று பாரு..

வாழும் வரை வாழு..
வாழும் போது
நல்லதை மட்டும் செய்து வாழு..
கூறுவதைக் கூறு..
அடுத்தவரைக் குறை கூறாது கூறு..

உன்னை நீ முதலில்
உணர்ந்து கொள்ளு..
பிறருக்கு..
உண்மையாக நடந்து கொள்ளு.

நாளைய நாளில்
நம்பிக்கை கொள்ளு..
நான் நான் என்ற அகங்காரத்தை
விட்டுத் தள்ளு.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11094

தீபாவளி..



பட்டாசு கொளுத்தி..கோலாகலமாக
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டது..
தெருக்கலெல்லாம் அலங்கோலமாக காட்சி தந்தபடி..


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11239