திங்கள், 28 ஏப்ரல், 2008

நீ என் நிலவொளி.

இன்னும் எத்தனை திங்கள் நான்
காத்திருக்கவேண்டும்...
இன்றுவரை உன் மெளனம்...போல்
இதுநாள் வரை நான் சந்தித்ததேயில்லை...

கரைக்கு யார்கொடுத்த வரம்..
கடலலையின் கண்ணீர் நுரையை..
தாங்கும் சக்தி...

யாருமிருந்தால் சொல்..
என் கண்ணீர் மட்டுமல்ல..
மனம் கொண்ட கவலைகளையும் தள்ளிவிட்டு..
மீண்டும் என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள..

வேண்டாத ஆசைகளை தீயிட்டு கொளுத்திட
நினைத்தபோதெல்லாம்....
மழையாய் உன் நினைவுகள் வந்து..
மறுபடியும்..மறுபடியும் உன்னையே நேசிக்கவைக்கிறதே...

என்றாவது ஒருநாள்..
உன் நிலவொளியும் என் வீட்டு யன்னலில்
பட்டுத்தெறிக்கும்..
அதுவரை நினைவுகளைச் சுமந்து...
கனவுகளை மட்டும் வளர்கிறேன்.