ஞாயிறு, 11 ஜனவரி, 2009

மதி தரும் நதி.


நிலவு உருமாறி
நீர் தரும் பெண்ணாகி
நீரில் பிரதிபலிக்கும் அழகே..

நீயிங்கு வந்ததால்..
நீந்துகின்ற விண்மீன்களும்...
நீளுகின்ற இரவொன்றில்..
நிசப்தமாய் கண்ணிமைக்க..

நீல மேகங்களும்
நீல மயில் உன்னைக் கண்டு
நீரில் கோலமிட..

நீ தொட்டதால்..
நீர் கூட அட்சய பாத்திரமாய்..
நீர் வற்றாத நீண்ட ஆயுளைப் பெற...


நித்தம் உன் வருகை காண..
நின்மதியின்றி தவமிருந்த
நிசாரியும்(சூரியன்) வெட்கத்தால்
நீல மேகத்தினுள் முகம் புதைத்துக்கொண்டானோ..

நின் முகம் காணாது..
நிம்மதியின்றி தவித்தது கண்டு..
நீயும் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சி தந்தாயோ..

நித்தம் உன் வருகை காண..
நீண்ட ஆயுளை நீயும் பெற..
நீங்காத நினைவுகளால்
நின் மலர் வதனம் பார்த்து காத்திருப்பேன்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9912