புதன், 2 ஜூலை, 2008

ஊமையின் மனசு...





குயிலின் இனிமையான குரல்
கூவும் போது தெரியும்..

மழலையின் கிளிப்பேச்சு
பேசும் போது புரியும்....

அலையின் சத்தம்
கரையைத் தீண்டும் போது கேட்கும்....

தென்றலின் வருகை உடல்
தழுவும் போது உணரும்...

பாடலின் இனிமை அதன்
இசையில் இன்பம் தரும்...

பாவையின் மனம் உன்னை நினைப்பதை
உன்னால் எப்படி அறியமுடியும்...

எடுத்துச் சொல்ல என்னால் முடியவில்லை..
இருந்தும் எழுதுவதால் உனக்குப் புரியும்..

இந்த ஊமையின் மனதில்...நீ
வந்த நாட்தொட்டு நான் உன் நினைவில்.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி

www.nilafm.com

கருத்துகள் இல்லை: