வெள்ளி, 28 நவம்பர், 2008

முழு நிலவு



நிலவு மறைந்த நேரம்..
என் முன் முழு நிலவாய்
நீயிருந்தாய்..

இன்று அமாவாசை என்றனர் பலர்..
பெளர்ணமி என்றேன் நானும்..
சிரித்துக்கொண்டார்கள்..

நானும் சிரித்துக்கொண்டேன்..
நீ என் அருகில் இருப்பதை புரிந்து
கொள்ளாத அவர்களை எண்ணி..


**********************************
நிலாவில் உலா வரும் தனிமதி..
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே..

கண்ணில் ஓர் நிலவு.




ஆலயத்தினுள் ஓர் அறிவிப்பு
புகைப்படங்கள் எடுப்பது
தவிர்க்கப்பட்டது என்று...

நிலவே நீ இங்கு
வந்த நேரம் முதல்
நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்..

என் கண்களால்
உன்னை மட்டும்.
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி