புதன், 25 ஜூன், 2008

மெளனம் கலைவதெப்போ...?




மெல்ல விடியும் பொழுதில்..
காலைக்கதிரவன் கரங்கள் நீட்டி காத்திருக்க..

நீண்ட இரவைக்கழித்து மீண்டும்
உன்னருகே புள்ளி மான்கள் பார்த்திருக்க..

கெண்டை மீன்கள் உன் உடல்...
மெல்லத் தீண்டி சிரித்து மகிழ்ந்திருக்க..

உன் வரவு கண்டு அதிகாலையிலே..
கருவண்டுகள் சுற்றிசுற்றி சிறகடித்து பறந்திருக்க..

அள்ளிக் கொள்ளும் கரங்கள் ஆவலோடு
எதிர் பார்த்திருக்க...

நாளும் உன் மலர்வை எதிர்பார்த்து..
நாணத்தால் அகம் சிவந்திருக்க...

மெல்ல இதழ் விரித்து..
மடல் திறந்து...

உனதுள்ளம் மலர்ந்து..
தென்றலோடு மணம் கலந்து....

கபடமற்ற மலரே தாமரையே...நீ
மலர்ந்து மெளனம் கலைவதெப்போ...?
-----------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: