புதன், 2 ஏப்ரல், 2008

நீ வருவாய் என...



அன்பைக் கூட்டித்தந்து...

அறிவைப் பெருக்கிதந்து...

கசப்பான நினைவுகளை கழிக்கக்கற்றுத்தந்து...

நன்மை தீமையை பிரிக்கக் காட்டித்தந்து...


இன்று உன் அன்புக்காகஏங்கவைத்து...

அறிவை உன்னோடு மட்டும்அடகு வைத்து...

உன் நினைவுகளை மட்டும்..

கழிக்காது வளர்த்து..

உன்னையும் என்னையும்..

இன்று வரை பிரிக்காதுகாத்து நின்று...


இன்றும் வருவாய் என..

தண்ணீரில் அழும் மீனாகயாருக்கும் புரியாமல்..

கண்ணீர் விடுவதும்...

கண்ணீர் விடுவதை அறியாது...


இரை கிடைத்ததாய்..

காலைச்சுற்றும் மீனாக...

இல்லாத ஒன்றுக்காய்..

பொல்லாத நினைவுகளை சேர்த்து வைத்து

கவலையில்முகம் புதைக்கிறேன்...

நீ வருவாய் என...


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: