----------------------------------------------------------------------------------------------------------------------
கடந்து வந்த 30 நாட்களில்..
காலை மாலை
கடவுள் வணக்கத்தைத்தவிர
வேறெந்த சிந்தனையுமில்லை..
பாலிருக்கும், பழமிருக்கும்..
பல வகையான உணவுகள் இருக்கும்..
பசிக்கு சாப்பிட்டதில்லை..
விதம்விதமான பாணங்கள்..
விருப்பம் போல் பருகக் கிடைக்கும்..ஆனால்..
விரும்பியும் குடித்ததுமில்லை..
தாகம் வந்து
தலையைச்சுற்றினாலும்..
தவறிக்கூட எச்சிலும் விழுங்கியதில்லை..
அலங்காரமாக ஆடையணிந்து
ஆடம்பரமாக வாழ்வமைத்து வாழ..
அதிகம் பேசி நாளைக் கழித்ததுமில்லை..
எல்லா வசதியிருந்தும்..
அல்லாவை நினைத்து
இல்லாத ஏழைகளுக்கு
இனிதே தானம் வழங்கி..
எல்லாக் குறைகளையும்..
மன்னித்து மகிழ்வோடிருக்கும் நோன்பு..
இருப்பதைக்கொடுத்து..
இல்லாததைப் பெற்று...
இருளகற்றி..ஒளிபெற்று
இன்பமுடன் வாழ வழியமைக்கும் திருநாள்..
இறை பார்க்க..
மறை சொன்ன
பிறை பார்த்து..
கறை நீங்க
கடைப்பிக்கும் நோன்பு..