புதன், 2 ஏப்ரல், 2008

அழியா நினைவுகள்



மார்கழியில் வந்த வானவில் தான் நீயும்

வந்த அடையாலம் தெரியாமல் போனாயோ...

என் அன்பால் குறையேதும் கண்டாயோ

கண்டிருந்தால் கனவிலும் எனை நினைக்காதே


நான் பிறந்த நாளை மறந்திருக்க

மறவாமல் வந்து அம்மணிக்கு வாழ்த்துவாழ்த்தியதை

நெஞ்சம் தான் மறக்குமா.

நெஞ்சம் உன்னோடு தான் தஞ்சம் என்று அறிவாயா


அறியாமல் எனை அறியாமல் ஆசை வைத்தேன்

தெரியாமல் யாருக்கம் தெரியாமல் அன்பை வளர்த்தேன்

புரியாமல் விடை தெரியாமல் காலத்தை கழித்தேன்

அறிந்தும் அறியாமல் செய்த குற்றத்தை நினைத்து நொந்தேன்


தெரிந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்ட புலவர் நீ

வருந்தி நானும் மனம்திருந்தி வருகையில்

பிரிந்துநீயும் போவது மனம் தான் தாங்குமா

தாங்கும் சக்தி உனக்கிருந்தால் எனக்கும் தந்துவிடு


தாங்கும் என் மனமும் தாங்கும்.

தங்கும்உன் நினைவுகளை அழித்து விட்டு

என் மனம்பிரியா என்னவரின் நினைவுகளோடு

என்றும் மனதினில் நிலையாய் வாழ்ந்திடுவேன்

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: