புதன், 25 ஜூன், 2008

நிஜங்களின் நினைவுகள்.





கண்ணெதிரே நின்றாய்..
கதைகள் பல சொன்னாய்...
முன்னம் ஒருபோதும் காணா..
உனதுள்ளம் தந்தாய்.

அடிவானம் சிவந்தது போல்..
அமைதியாய் நானும் உன்வசமாகினேன்..
பிடிவாதமாய்க் கேட்டாய்..
பதிலும் நானும் தந்தேன்.

தாய் முகம் கண்டு..
மொழி வராத குழந்தையாய்..
மனம் முழுதும் உன்முகம் கண்டு..
மனதால் தினம் பேசி, நினைவால் வாழுகிறேன்.

யார் யாருக்கோ எல்லாம்..
கவிதைகள் எழுதி குவிக்கிறாய்.
என் மனம் வேதனையடைக்கூடாதென்று..
எங்கோ ஒரு மூலையில் என்பெயரைத் தினிக்கிறாய்.

அங்கேயும் நான் நினைப்பதெல்லாம்
உன் கவிதை கண்ணூறு படாமல் இருக்கவாவது
என் பெயர் அதில் இடம் பெறட்டும்
அதிலாவது நான் வாழந்து கொண்ட திருப்தியில்.

மார்கழி வருகிறது என்றாலே
மனம் நிறைந்த ஆனந்தம்..
எப்போதோ பதித்த கால் தடங்கள்
பார்த்து மலர் தூவி மார்கழியை வரவேற்கின்றேன்.

சிந்தையிலே தென்றலாய் வந்தாய்..
தென்றலை காற்றலையாய் தந்தாய்.
கற்றது கை மண் அளவிருக்க
பற்றுவைத்து நீயும் என்னை ஊக்கிவித்தாய்..

சிகரமாய் என்னை நீயும் போற்றி
புகழ் பாட்டாய் பல போட்டு தினம்
உன் வசமாக்கி என் நினைவுகளை
உன் நினைவுகளாக மட்டும் வாழவைத்தாய்.

காலைக் கதிரொளி பட்டு
மலர் படிந்திருக்கும் பனி விலகியது போல்
உன் வரவு கண்டு என் கண்ணீர்த்
துளி காய்ந்து கவலை போய் மகிழ்வாய் நானிருப்பேன்.

அந்த இனிமை நிறைந்த
நிஜமான நினைவுகளால் பகல்
கதிரவன் நிழலாய் தொடர்ந்து வரும்
நிஜங்களில் நினைவுகளைச்சுமக்கிறேன்.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: