செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

வாழ்வு உன் கையில்.


எடுத்ததுக்கெல்லாம்
அதையே நம்பி நம்பி
பழக்கப்பட்டு பணத்தை
வாரி இறைத்த அவன்..
இன்று பதுங்கு குழியில்...

வசந்தம் வீசும் என்றவன்..
வாழ்வில் மாலையாகமுன்பே
மலர் கருகிப்போனதுபோல்..
கலி வந்து அவனையும்
கவலையில் ஆழ்த்தியது...

ஐயோ அம்மா என்றொரு அவலக்குரல்..

குழியில் இருந்தபடி விழி வீசினான்...
ஊருக்கெல்லாம் சாஸ்திரம் பார்த்த
நம்பிக்கையான மனிதரும் சாவின் பிடியில்..

ஓ.......இன்னுமா இருக்கிறீர்கள்..?

நம்மை வாழவிடாதவர்..
வாசல் வரை வருவார் என்று
என்றாவது உங்கள் காண்டம் சொல்லவில்லையா..?

ஊருக்கெல்லாம் ஒரு நாள்
எம காண்டம் என்று
எப்போதாவது கண்டதில்லையா...?

ராகு காலம் வந்து
ஊரே சுடு காடாகும் என்று
ஒரு நாளும் பார்த்ததில்லையா..?

எல்லாமே என் மனதோடு கேட்டுக்கொண்டு..
ஒட்டியிருந்த புழுதியோடு தட்டிக்கொள்ளுகிறேன்..
எதையும் நம்பாத அவர்களை வாழ்த்திக்கொண்டு.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10075