திங்கள், 28 டிசம்பர், 2009

சில நிமிடங்களுக்கு முன்


காற்றில் கலகல வென்று சிரிக்கும்..
பசுமை நிறைந்த மரத்தின் இலைகள்..
பட பட வென்று இறகையடித்து..
தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்
பட்சிகள்..

அமைதியாகயிருந்து
பசுமை நினைவுகளை
பேசிக்கொள்ளும் தம்பதிகள்..

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில்..
தன்னை மறந்து இளைப்பாறும்
வயதான வியாபாரி..

இத்தனையும் அந்த மரம்..
வெட்டப்படும் முன்..