புதன், 9 செப்டம்பர், 2009

சந்தோசம்..



மழை வருவது
மண்ணுக்குச் சொந்தம்..

செடிமுளைப்பது..
வேருக்குச் சொந்தம்..

அலையடிப்பது
கடற் கரைக்குச் சொந்தம்..

தேனுண்ணும் வண்டு..
மலருக்குச் சொந்தம்....

கருவில் வளரும் குழந்தைக்கு..
அன்னை மடிசொந்தம்..

அன்பே நீ வரும், தரும் சொந்தம்..
இந்த மங்கைக்கு மனச் சந்தோசம்..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நவீன சங்கம்..



நிலவுப்பொழுதில்..
நீயும் நானும் மற்றும்
சுற்றத்தாரும், மற்றவரும்..

வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து
ஒரு இடமாகச் சந்தித்து
கூடிப் பொழுதைப்போக்க..

சங்கம் வளர்த்த
அந்தப்பெரிய மரம் தந்த நிழல்..
இன்று அனாதையாக அது இருக்க..

இன்று அவரவர்..
தத்தம் வீடுகளிலிருந்து..
உலகெங்கும் உறவாட வைக்கும்..
நவீன சங்கம் வளர்க்கும் கணனியாம்
.