புதன், 25 நவம்பர், 2009

மீளாத சோகம்..


மீளாத சோகம்..எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே..

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே..

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே..

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே..

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்..

கருத்துகள் இல்லை: