திங்கள், 21 டிசம்பர், 2009

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..2

முன்னால் காதலனே
கண்முன்னால் கண்ட உன் மடல்..
கண்டு இதயம் டைப்படிக்க
என் விரல்களும் டைப்படிக்கிறது..

நல்ல செய்தி ஒன்று கூறினாய்..
நீ தண்டனை பெறுவதாக..
ஆஹா....அதற்காக நான் செய்த
பிரார்த்தனைகள் வீண் போகவில்லை...

சித்திரகுப்தாவிற்கு பதிவிலிடுகிறேன்..
சித்திரவதைகளைக் கூட்டி
சிறையிலிடும்படி..
சிந்தனை செய்யாதே..தப்பிக்கலாம் என்று..

பெண் என்றால் பேயும் இரங்குமாம்..
பேய் என்றால் நானும் இரங்குவேன்..ஆனால்..
நீயோ...பேயுமில்லை பிசாசுமில்லை..
துரோகி...மன்னிக்கவே முடியாத பாவி நீ..

நிலவு போல நீ வந்தால்..
வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டிருப்பேன்..
வெளிச்சம் போல வேஷம் போட்டாய்..
விழுந்து நானும் எரிந்தது போதும்..நோ எக்ஸ்கியூஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234&pid=152316&mode=threaded&start=#entry152316

கருத்துகள் இல்லை: