சனி, 21 நவம்பர், 2009

கவிதை பாடும் அவள் இதழ்




இதழ்கள் விரிப்பழகில்..
உன் இதழ்களின்
சிரிப்பைக் கண்டேன்..

********************************

இதழ்கள் விரித்து..
இந்த ரோஜா
இதயம் மலர்ந்து..

முகம் சிவந்தது..
நாணத்தாலா..
நான் வந்ததாலா..


*********************************
யாரோ சொல்லிக்கொண்டு
போகிறான்..
அவள் இதழ்களைக் காணவில்லை என்று..
பையித்தியக்காரனவன்..
இதழ்களை காணத் தவறிவிட்டான்..

**********************************

கரு வண்டுகளும்..
உன்னைக் காதலிக்கின்றவோ..
வைத்த கண்வாங்காமல் பார்க்கின்றதே...

**********************************

இதழில் தேன் குடிக்க..
இமைகளில் கரு வண்டுகள்..
வட்டமிட்டு கவி பாடுகிறதோ..
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11536

கருத்துகள் இல்லை: