சனி, 21 நவம்பர், 2009

நிலவுத் தாய்..




வருவாய் தருவாய்..
அருள்வாய் எனதுயிரே..
துயர் கொண்ட எனதுள்ளம்..
துடைத்திட விரைந்தோடி வருவாய்..

தினம் உன்னையே அழைத்தேன்..
மனம் தினம் பலமுறை தொழுதேன்..
மனம் கனத்து தினம் அழுதேன்..
சினம் கொண்டு நான், நீயின்றி துடித்தேன்..

தூறல் மழையில் நான் நனைந்தாலும்..
துடித்துப்போய் சேலைத்தலைப்பால் தலைதுடைத்திடுவாய்..
கார் இருளில் கைபிடித்து கண்சிமிட்டும் நட்சத்திரமாய்..
பார் முழுதும் பவணி வரும் நிலவும் நீதான் என் அம்மா.

உள்ளம் முழுதும் உந்தன் எண்ணம்..
கள்ளம் ஏதும் இல்லாத கொள்ளையின்பம் கண்டேன்..
வெள்ளம் போல் கொண்ட பாசம் தரவா..
தர வா..எனதுயிர் தாயே என்னோடு வா..

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: