திங்கள், 21 டிசம்பர், 2009

சொர்க்கத்திலிருந்து ஓர் மின்னஞ்சல்..




அன்பே நலமா..
சொர்க்கத்திற்கு வந்த நான்..
உனக்குச் செய்த துரோகத்தால்
நரகத்திற்கு தள்ளப்படும் நிலையில் தவிக்கிறேன்...

நரக வேதனைகளுக்குப் போகும் முன்..
நான் உனக்கு அனுப்புகிறேன் ஓர் மின்னஞ்சல்..
நடந்ததெல்லாம் மறந்து இதை ஏற்றுவிடு..

என்ன இடையூர்கள் வந்தாலும்..
என்னவள் நீயன்றோ வேறொருத்தியுமில்லை
என்றுனக்குச் சொல்லிவிட்டு..

அன்றவன் தந்த ஐடியா கேட்டு..
அநியாயமாக உன்னைக் கைவிட்டுவிட்டேன்..
அதுமட்டுமா என் கண்ணே..

பொல்லாத பெண் ஆசையில்..
இல்லாததெல்லாம் சொல்லியுன்னை..
இழிவு படுத்திவிட்டேன்..

பொல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
கல்லால் அடித்தாலும் பரவாயில்லை..
புழுவால் என்னை குளிப்பாட்டி எடுக்கிறார்களே..

எங்கே நான் போய்ச்சொல்ல..
என்னவளே எனக்காக இரங்கி ஒரு மெயிலிடு..
எமன் அண்ணா யோசித்து தண்டனைகளை குறைத்துவிடுவார்.

அடுத்த மின்னஞ்சல் வருமுன்..
ஆருயிரே மன்னித்து மனமிரங்க மாட்டாயா..
மறு பிறப்பு ஒன்றிருந்தால் மனம் வந்து மணமுடிப்பேன் உன்னையன்றோ.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=12234(பதில் போகும்..)

கருத்துகள் இல்லை: