புதன், 25 நவம்பர், 2009

நிலவே கலங்காதே..




ஓ....நிலவே
நீயும் அழுகிறாய்...
கவிஞர்களுன்னை கவிவரிகளால்
கலங்கப்படுத்தி விட்டார்கள் என்றா..?

தேய்ந்து தேய்ந்து வளருகிறாய்..
என்றதால்...உன்னை..
வருத்தி வருத்தி அழுகிறாயா..?

நாடுகள் பலவற்றிலிருந்து வந்து..
தேடுதல் பலவாயிரம் செய்து..
உன்னை நாசமாக்கி படமெடுத்தார்களென்றா..?

துணையேதுமில்லாமல்..
தனித்து விடப்பட்டு..
மேகத்தின் ஆடைபட்டு..
விதவைபோல் காணப்படுகிறாய் என்றா..?

இத்தனை கேள்விகளை கேட்டு..
இன்னும் உன்னை அழவைக்கிறேன்..
உன் அழுகைக்கு நானும் ஒரு காரணம்..
மன்னித்துக்கொள் நிலவே...

படித்தேன் உன்னைப்பற்றியதோர் செய்தி..
நிலவிலும் நீர் உண்டாம்..

எழுந்தது எனக்குள்ளே பல கேள்வி..
அதனால் கேட்டேன்
பதில் கூறு...ஏனெனில் நானும் அழுகிறேன்..
விடையே இல்லாத கேள்விகளைக்கேட்டு..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11638

கருத்துகள் இல்லை: