ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வருவாயா





தேடும் விழிகளுக்கு..
காட்சியாய் நீ வருவாயா..
பாடும் பாடலுக்கு...
மொழியாய் நீ வருவாயா..

வளைந்து கொடுக்கும்
நாணலைப் போல்..
அங்கும் இங்கும் அலைந்து
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்..

அழுத விழிகளில்..
வழிந்தோடும் கண்ணீரில்..
வரிவரியாக உன் பெயரை..
உரக்கச்சொல்லுகிறது என் இதயம்..

இன்னும் ஏன் மெளனம்..
இதுவரை பொறுத்தது போதும்..
இரும்பல்ல என் இதயம்..
இருளுக்குப் பின் ஒளி என்றால்
அது உன் வருகையாக இருக்கட்டும்.

வருவாயா..

________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி



கருத்துகள் இல்லை: