ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வாசல் தேடி வரும் வசந்தம்..



Posted Image



நீண்ட தொலைவில்
நீயிருந்து அழகாக பேனா பிடித்து..
நீ நினைப்பதை எழுதி..

அருகில் இருந்து அணைப்பது
போல் இடையிடையே
அன்பாக பல பாடல்கள்..சேர்த்து..

பக்கம் பக்கமாக கண்ணீருடன்..
பாசக் கதைகள் பல பேசி..வரும்
அன்பு மடலை..

சட்டைப் பைக்குள்..
இஷ்டம் போல் கொண்டு திரிவேன்..
இரவுப் பொழுதிலும் விடிய விடிய
திரும்பத் திரும்ப படித்துக்கொண்டு இருப்பேன்..

கையிலெடுத்து முத்தம் பலகொடுப்பேன்..
நெஞ்சோடு அணைத்திருந்து..
கண்ணில் நீர் வழிய..
நீ அனுப்பும் மறு மடலுக்காக காத்திருப்பேன்..

பளிங்கு போல் உன் கையினால்..
மெழுகு போல் வார்த்தைகளை சேர்த்து..
உருகி உருகி முத்து முத்தாக
எழுதும் எழுத்துக்களே என் நினைவில்
இன்றும் என்றும் நிலையாய் இனிக்கிறது.

விதம் விதமான
கையடக்க செல்பேசி
பல நுட்பத்திறன் கொண்ட கணனி

இத்தனையிலும் நாளாந்தம் வரும்..
அன்பு மடல்கள்
என்றும் இனித்ததில்லை எனக்கு.

கருத்துகள் இல்லை: