ஞாயிறு, 24 அக்டோபர், 2010

சுமைகள்...





விடுமுறையில் சென்று..
திரும்பி வரும்..என்னை
வாசல் வரை வரவேற்க
பல உறவுகள் காத்திருக்க..

சுமந்து வந்த பொதிகளை..
வாங்கிக் கொண்டு...
என் சுமை குறைந்ததாக..
எண்ணிக் கொள்ளும்..
சுற்றத்தாருக்கும்...

எங்கே புரியப்போகின்றது..
நான் சுமந்து கொண்டு
இருப்பது மறக்கமுடியாத
உன் நினைவுகளை
என் இதயச்சுமைகளாக..

கருத்துகள் இல்லை: