ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஒரு சொல் சொல்லாயோ



கடந்த கால எண்ணங்கள்
என்னைக் கடந்து போகின்ற
ஒவ்வாரு நிமிடத்திலும்..

ஓயாது கரையைத் தீண்டும்..
தொடர் அலையாய்..
விடாது தொடர்ந்து வருகிறது
உன் உருவம்..

ஒரு பக்கம் சுற்றும்
காத்தாடி போல்
அன்று என் நினைவில்
உனக்காகக் காத்திருந்தேன்..
நீ வரவில்லை..

இன்று..

உதிர்ந்து விழுகின்ற
பூக்களைப் போல்..
சிதைந்து அழுகின்றது..என் நெஞ்சம்..

உதிராத பூவும்..
மறையாத ஞாயிறும்..
தேயாத திங்களும்
எங்காவது இருந்தால்..

எனக்காக
ஒரு சொல் சொல்லிவிடு...
அவற்றைப் பார்த்து
அதுபோல மகிழ்வாக
வாழக் கற்றுக்கொள்கிறேன்.

_______________________________
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

கருத்துகள் இல்லை: