skip to main |
skip to sidebar
கண்ணீரின் பயணம்.
வழியும் கண்ணீர் என் விழியைப்பார்த்து(க்) கேட்டது... எதற்காக என்னை மண்ணில் விழச்செய்கிறாய் (என்று.) எண்ணிலடங்கா சோகம் என்னை வாட்டும் போது.. என்னையறியுமறியாமல்.. என் விழிகள் உன்னை அனுப்பிவைக்கின்றனவே... ஓ......விழியே.. கண்ணீரின் நிலையைப்பார்... நிலைத்தது எதுவுமில்லை.. வரும் துன்பம் கரைந்தோடி... நீர் நிறைந்தோடி... நிலையில்லா வாழ்வில்.. மண்ணோடு நீராகி மறுபடியும் மண்ணில் காணாத கண்ணீர் மறைந்த மாயத்தைப் பார்... வரும் துன்பங்களை.. கண்ணீர் போல் துரத்திவிடு... கவலைகளை துடைத்துவிடு.. காலம் உனக்காக காத்திருக்கிறது.. கண்ணீருக்கு விடை கொடு.. மனமுடைந்த போது... மனதாறுதலாக கண்ணீரின் கதை தந்து சிதைந்த என்னுள்ளத்தை.. சிறப்பாக வாழ வழிதந்தாய்.. ஓ......கண்ணீரே.. விழியிரண்டும் ஒளிபெறட்டும் வலியிருக்கும் வாழ்வில் வழிபிறக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக