ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நீளமான நேரங்கள்.




நீயூம் நானும் ஒன்றாகயிருந்தபோது...
பகல் பொழுது கூட
கண்ணிமைக்கும் தூரத்தில்..
கண் சிமிட்டிக்கொண்டிருந்தது...

இது இன்னும் நீளாதா என
ஏங்கும் ஒவ்வாரு பொழுதிலும்..
இருளும் வந்து
இரு புருவங்களின் இடைவெளியாய்..
இருந்து விட்டுச் சென்றது...

நீளும் பொழுதுக்காக..
நீயூம் நீங்காதிருக்க வேண்டி
நீண்ட தவம் புரிந்து
வரம் ஒன்று நான் வாங்கி வர..

கூடு விட்டுப் போன ஆவியாய்...
என்னை விட்டு சென்றாய் நீயூம் பாவியாய்..




கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image

கருத்துகள் இல்லை: